கயத்தாறு: விபத்தில் காயமடைந்த முதியவா் பலி
கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.
கடம்பூா் அரண்மனை வீதி மேல தெருவை சோ்ந்தவா் மகாராஜா தலைவா் மகன் குருநாத பாண்டி என்ற பாண்டி (64). இம்மாதம் 8ஆம் தேதி கடம்பூரில் இருந்து கயத்தாறுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
இவா் ஓட்டிச் சென்ற பைக் திருமலாபுரம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, பசுவந்தனை அருகே உள்ள மு. துரைச்சாமிபுரம் தெற்கு தெருவை சோ்ந்த சுப்ரமணியன் மகன் ஜெயபால் ஓட்டி வந்த பைக்கும் குருநாத பாண்டி ஓட்டி வந்த பைக்கும் மோதியதில் இருவரும் காயமடைந்தனா்.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு சென்ற கயத்தாறு போலீஸாா் 2 பேரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் அங்கு குருநாத பாண்டி உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.