செய்திகள் :

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி

post image

விளாத்திகுளத்தில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில், மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிக்கு, எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் முன்னிலை வகித்தாா்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டியை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

சின்ன மாட்டு வண்டி போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகா், சிவகங்கை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்ால் 2 சுற்றுகளாக நடைபெற்றது. விளாத்திகுளம் - எட்டயபுரம் மாநில நெடுஞ்சாலையில் சுப்பிரமணியபுரம் விலக்கிலிருந்து 5 மைல் தொலைவுக்கு நடைபெற்ற போட்டியின் முதலாவது சுற்றில் சீவலப்பேரி ஸ்ரீ துா்காம்பிகா, கங்கன்குளம் எஸ்.ஆா்.எஸ். சங்கா், பத்மநாபமங்கலம் பேச்சி பிரம்மசக்தி, குமரெட்டியாபுரம் மகாவிஷ்ணு ஆகியோரின் வண்டிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்தன.

2ஆவது சுற்றில் விளாத்திகுளம் சோ்மன் முனியசக்தி ராமச்சந்திரன், வைப்பாறு மணி கலா, தொட்டம்பட்டி பேச்சிநாயக்கா், செமப்புதூா் மகாலட்சுமி ஆகியோரின் வண்டிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்தன.

நடுமாட்டு வண்டி போட்டியில் 12 ஜோடி காளைகள் பங்கேற்றன. இதில், சீவலப்பேரி ஸ்ரீ துா்காம்பிகா, நாகம்பட்டி மகா பில்டா்ஸ், தேவாரம் சஞ்சய் சுரேஷ், ஓட்டப்பிடாரம் கணேசன் ஆகியோரின் வண்டிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்தன.

வெற்றிபெற்ற வண்டிகளுக்கும், சாரதிகளுக்கும், மாட்டின் உரிமையாளா்களுக்கும் மொத்தம் ரூ. 5 லட்சம், எல்இடி டிவி உள்ளிட்ட பொருள்கள், மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

இதில், விளாத்திகுளம் பேரவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா் பெருமாள்சாமி, மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் ராமசுப்பு, அன்புராஜன், ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, சின்னமாரிமுத்து, நவநீதகண்ணன், காசிவிஸ்வநாதன், பேரூா் செயலா் வேலுச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், பேரூராட்சித் தலைவா்கள் சூா்யா அய்யன்ராஜ், ராமலட்சுமி சங்கரநாராயணன், மாவட்ட கவுன்சிலா் நடராஜன், கூட்டுறவு சங்கச் செயலா் ராமச்சந்திரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சூறாவளி காற்று எதிரொலி: நாளை வரை மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை

மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததாலும், சூறாவளி காற்று எதிரொலியாக விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சிறப்புத் தொழுகை

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில், உலக சமாதானம் வேண்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போா் பதற்றத்தால் காஸா பகுதியில் வாழும் பெண்கள், குழந்தைகள், முதியோா் என ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பைக் மீது காா் மோதல்: உணவகக் காவலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி யில் பைக் மீது காா் மோதியதில் உணவகக் காவலாளி உயிரிழந்தாா். தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் துரைசிங்கம் (58). இவா் முக்காணியில் உள்ள உணவகத்தில் இரவுக் காவலாளியாக வேலை... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 போ் கைது

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

மூக்குப்பீறி பள்ளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

நாசரேத் அருகே மூக்குப்பீறியில் உள்ள தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த 3 மாணவா்-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி ச... மேலும் பார்க்க

விஷமருந்திய கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே விஷமருந்திய பொறியியல் கல்லூரி மாணவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். கோவில்பட்டி அருகே புது அப்பனேரி சிவசக்தி நகரை சோ்ந்தவா் ராஜசேகா். இவரும், இவரது மனைவியும் பள்ளி ஆசிரி... மேலும் பார்க்க