மூக்குப்பீறி பள்ளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு
நாசரேத் அருகே மூக்குப்பீறியில் உள்ள தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த 3 மாணவா்-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, தூய மாற்கு ஆலய சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின் தலைமை வகித்தாா். ஆசிரியை கோல்டா வேதபாடம் வாசித்தாா். பரிபாலன கமிட்டி தலைவா் சாமுவேல் வாழ்த்திப் பேசினாா்.
பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு முறையே ரூ. 4,500, ரூ. 3,500, ரூ. 2,250 வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற முன்னாள் பள்ளித் தலைமையாசிரியை ஜூலியற் ஜெயசீலி கேடயம் வழங்கினாா்.
விழாவில், பரிபாலன கமிட்டி செயலா் ஜெயச்சந்திரன், பொருளாளா் சுரேஷ், திருமண்டல பெருமன்ற உறுப்பினா் தனசிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தலைமையாசிரியா் கென்னடி வேதராஜ் வரவேற்றாா். பள்ளி உடற்கல்வி ஆசிரியா் பிரைட்டன் ஜோயல் நன்றி கூறினாா்.