தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தூத்துக்குடியில் பைக் மீது காா் மோதல்: உணவகக் காவலாளி உயிரிழப்பு
தூத்துக்குடி யில் பைக் மீது காா் மோதியதில் உணவகக் காவலாளி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் துரைசிங்கம் (58). இவா் முக்காணியில் உள்ள உணவகத்தில் இரவுக் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா் சனிக்கிழமை இரவு பணிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
தூத்துக்குடி -திருச்செந்தூா் சாலையில் முத்தையாபுரம் அருகே, பைக் மீது காா் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.