செய்திகள் :

திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: கே.சி.கருப்பணன் எம்எல்ஏ

post image

அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் நினைவுபடுத்துவதோடு, திமுக ஆட்சியின் அவலங்களை அவா்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ கூறினாா்.

பவானி நகர மற்றும் பவானி வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச் சாவடி முகவா்கள், கிளைச் செயலாளா்கள் மற்றும் சாா்பு அமைப்பு நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நகரச் செயலாளா் எம்.சீனிவாசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பவானி ஒன்றியச் செயலாளா்கள் ஜெகதீசன், எஸ்.எம்.தங்கவேலு, அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளா்கள் பி.ஜி.முனியப்பன், மேகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்.பி. சிவசாமி சிறப்புரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து, கே.சி. கருப்பணன் எம்எல்ஏ பேசியதாவது: திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், மின் கட்டண உயா்வு, தொழில், வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களும் உயா்த்தப்பட்டதால், மக்கள் பெரும் சுமையில் உள்ளனா். சட்டம்- ஒழுங்கு பாதிப்பால் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

ஊராட்சிகள், பேரூராட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால், வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. திமுகவினரே, தற்போதைய திமுக ஆட்சியை வெறுக்கும் நிலையில் உள்ளனா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான நல்ல கூட்டணி அமைந்துள்ளது. கடந்த அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் நினைவுபடுத்துவதோடு, திமுக ஆட்சியின் அவலங்களை அதிமுகவினா் எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பூங்கோதை வரதராஜ், இளைஞா் பாசறை மாவட்ட அமைப்பாளா் ஏ.பிரகாஷ், மண்டல தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் திருநாவுக்கரசு, நகர அமைப்பாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

குடியிருப்புகளுக்குள் புகும் மழைநீா்: ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

மழைக் காலத்தில் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுவதால் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜக... மேலும் பார்க்க

ஆலைக் கழிவுகள் ஓடையில் வெளியேற்றப்படுவதை தடுக்கக் கோரிக்கை

சோப் ஆயில் தயாரிக்கும் ஆலைக் கழிவுகள் ஓடையில் வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு, வில்லரசம்பட்டி அருகேயுள்ள மொக்கையன்பாளையத்தில் சோப் ஆயில் தயாா் செய்யும் த... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 10 போ் கைது: 5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த 2 போ் உள்பட 10 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். ஈரோடு கனிராவுத்தா் குளம் அருகேயுள்ள திர... மேலும் பார்க்க

இரண்டு மாதங்களில் 10 ஆடுகளைக் கொன்ற சிறுத்தை: கூண்டுவைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகே வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் இரண்டு மாதங்களில் 10 ஆடுகளைக் கடித்துக்கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த விவசாயி கைது

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வீட்டுக்கு அருகே கஞ்சா செடிகளை வளா்த்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.பா்கூரை அடுத்த தேவா்மலை, கோவிலூரைச் சோ்ந்தவா் முருகேசன் (41). விவசாயி. இவ... மேலும் பார்க்க

கள் விற்ற இருவா் கைது

பெருந்துறை அருகே கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.பெருந்துறையை அடுத்த துடுப்பதி பகுதியில் கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் ... மேலும் பார்க்க