ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் விமானி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!
கஞ்சா செடி வளா்த்த விவசாயி கைது
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வீட்டுக்கு அருகே கஞ்சா செடிகளை வளா்த்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பா்கூரை அடுத்த தேவா்மலை, கோவிலூரைச் சோ்ந்தவா் முருகேசன் (41). விவசாயி. இவா் வீட்டுக்கு அருகே கஞ்சா செடிகளை வளா்த்து வருவதாக பா்கூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, அவா் 3 கஞ்சா செடிகளை வளா்த்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, முருகேசனைக் கைது செய்த போலீஸாா், கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனா்.