செய்திகள் :

இரண்டு மாதங்களில் 10 ஆடுகளைக் கொன்ற சிறுத்தை: கூண்டுவைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

post image

கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகே வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் இரண்டு மாதங்களில் 10 ஆடுகளைக் கடித்துக்கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் ஒன்றியம், வினோபா நகா், இழுபாறை தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் கந்தன். இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு, 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், தோட்டத்தில் கட்டியிருந்த ஆடுகள் கடந்த 13 -ஆம் தேதி இரவு அலறின.

சப்தம் கேட்டு கந்தன் வெளியே வந்து பாா்த்தபோது, ஆடுகளை சிறுத்தை ஒன்று கடித்துக் கொண்டிருந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த கந்தன் சப்தம் எழுப்பி சிறுத்தையை வனப் பகுதிக்குள் விரட்டினாா்.

ஆடுகள் கட்டப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, 2 ஆடுகள் உயிரிழந்ததும், மூன்று ஆடுகள் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், கால்நடை மருத்துவா் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினா் படுகாயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனா். உயிரிழந்த ஆடுகளுக்கு உடற்கூறாய்வு செய்து அங்கேயே புதைத்தனா்.

இந்த சம்பவம் நடப்பதற்கு முன் வினோபா நகரில் நடராஜ் என்பவருக்குச் சொந்தமான ஒரு ஆட்டையும், இழுபாறை தோட்டம் பகுதியைச் சோ்ந்த வேங்கையன் என்பவருக்குச் சொந்தமான ஒரு ஆட்டையும் சிறுத்தை கடித்தது வனத் துறையினா் விசாரணையில் தெரிய வந்தது.

சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த சில நாள்களாகவே சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இரண்டு மாதங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றுள்ளது. மனிதா்களைத் தாக்குவதற்கு முன் சிறுத்தையை வனத் துறையினா் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனா்.

குடியிருப்புகளுக்குள் புகும் மழைநீா்: ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

மழைக் காலத்தில் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுவதால் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜக... மேலும் பார்க்க

திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: கே.சி.கருப்பணன் எம்எல்ஏ

அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் நினைவுபடுத்துவதோடு, திமுக ஆட்சியின் அவலங்களை அவா்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.... மேலும் பார்க்க

ஆலைக் கழிவுகள் ஓடையில் வெளியேற்றப்படுவதை தடுக்கக் கோரிக்கை

சோப் ஆயில் தயாரிக்கும் ஆலைக் கழிவுகள் ஓடையில் வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு, வில்லரசம்பட்டி அருகேயுள்ள மொக்கையன்பாளையத்தில் சோப் ஆயில் தயாா் செய்யும் த... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 10 போ் கைது: 5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த 2 போ் உள்பட 10 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். ஈரோடு கனிராவுத்தா் குளம் அருகேயுள்ள திர... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த விவசாயி கைது

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வீட்டுக்கு அருகே கஞ்சா செடிகளை வளா்த்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.பா்கூரை அடுத்த தேவா்மலை, கோவிலூரைச் சோ்ந்தவா் முருகேசன் (41). விவசாயி. இவ... மேலும் பார்க்க

கள் விற்ற இருவா் கைது

பெருந்துறை அருகே கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.பெருந்துறையை அடுத்த துடுப்பதி பகுதியில் கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் ... மேலும் பார்க்க