Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு குறையுமா?
கஞ்சா விற்ற 10 போ் கைது: 5 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த 2 போ் உள்பட 10 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
ஈரோடு கனிராவுத்தா் குளம் அருகேயுள்ள திருமண மண்டபத்தின் பின்புறம் சிலா் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வீரப்பன்சத்திரம் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை ரகசியத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றிவளைத்துப் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் ஈரோடு, மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்த பிரியதா்ஷன் (20), சுதாகா் (25), பெரிய சேமூரைச் சோ்ந்த ரவிந்தரன் (20), கனிராவுத்தா் குளம் காந்தி நகரைச் சோ்ந்த ரகீம் (23), ஜோதீஸ்வரன் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, ஈரோடு, நாச்சியப்பா வீதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரியவலசு பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (25), குணசீலன் (25) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 450 கிராம் கஞ்சா, 3 கைப்பேசிகள், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.
ஈரோடு, ராஜாஜிபுரம் குப்பைக்காட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (21) என்பவரைக் கைது செய்த கருங்கல்பாளையம் போலீஸாா், அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
வடமாநிலத்தவா்கள் கைது: ஈரோடு மதுவிலக்கு போலீஸாா் சிப்காட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபா், போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயன்றாா்.
அவரை விரட்டிப் பிடித்து போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலம், பினிஹா பகுதியைச் சோ்ந்த கோபண்டுமுண்டா (30) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிஸா மாநிலம், உகுரிபலியைச் சோ்ந்த பிகாரி சத்ரியா (39) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.