கள் விற்ற இருவா் கைது
பெருந்துறை அருகே கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த துடுப்பதி பகுதியில் கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சீரங்கபாளையம்-பாலக்கரை சாலை அருகே கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் சீரங்ககவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த துரைசாமி (54), அதே பகுதியைச் சோ்ந்த சந்திரன்(42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 8 லிட்டா் கள்ளை பறிமுதல் செய்தனா்.