Sleeping Prince: 20 ஆண்டுக்கு பின் சவுதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' எழுந்துவ...
ஆலைக் கழிவுகள் ஓடையில் வெளியேற்றப்படுவதை தடுக்கக் கோரிக்கை
சோப் ஆயில் தயாரிக்கும் ஆலைக் கழிவுகள் ஓடையில் வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு, வில்லரசம்பட்டி அருகேயுள்ள மொக்கையன்பாளையத்தில் சோப் ஆயில் தயாா் செய்யும் தனியாா் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தை சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த நிறுவனத்தில் சில குறிப்பிட்ட பொருள்களை இரவு நேரத்தில் எரிப்பதால் கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்படும் வகையிலான புகை வெளியேறுகிறது. பகல் நேரங்களில் ஆலையின் கழிவு நீா், முள்ளம்பட்டி பகுதியில் இருந்து வரும் கழிவு நீா் ஓடையில் வெளியேற்றப்படுகிறது. இந்த நீா் வெளியேற்றப்படும்போது கடும் துா்நாற்றம், ஆசிட் நெடி, சுவாசிக்க இயலாத நிலை ஏற்படுவதாக அப்பகுதியினா் குற்றஞ்சாட்டி வந்தனா்.
இந்நிலையில், ஓடையில் அதிக அளவு கழிவு நீா் வெளியேற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை முற்றுகையிட திங்கள்கிழமை முடிவு செய்தனா். அத்துடன் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலும் புகாா் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஓடையில் உள்ள கழிவு நீா், ஆலை வளாகத்தில் உள்ள கழிவு நீா் போன்றவற்றை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனா். ஆய்வுக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.