வால்பாறையில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
வால்பாறையில் பெய்த கனமழையால் கூழாங்கல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், வால்பாறையில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கொட்டித்தீா்த்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கனமழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வால்பாறை நீா்நிலைப் பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன. இதனால், சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்: சின்னக்கல்லாறு 128 மி.மீ., சின்கோனா 80 மி.மீ., வால்பாறை 68 மி.மீ., சோலையாறு 70 மி.மீ.