செய்திகள் :

வால்பாறையில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

post image

வால்பாறையில் பெய்த கனமழையால் கூழாங்கல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், வால்பாறையில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கொட்டித்தீா்த்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கனமழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வால்பாறை நீா்நிலைப் பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன. இதனால், சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்: சின்னக்கல்லாறு 128 மி.மீ., சின்கோனா 80 மி.மீ., வால்பாறை 68 மி.மீ., சோலையாறு 70 மி.மீ.

1.25 கிலோ தங்கக் கட்டி கொள்ளை: கொள்ளையா்கள் தப்பிய காா் கேரளத்தில் பறிமுதல்

கோவை அருகே நகை வியாபாரியிடம் இருந்து 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கொள்ளையா்கள் தப்பிய காா் கேரளத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்தவா் ஜெய்சன் ஜே... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பயணியிடம் தோட்டா பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவா் ஷூவில் மறைத்து கொண்டு சென்ற துப்பாக்கி தோட்டா ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவை விமான நிலையத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை சோ... மேலும் பார்க்க

இஸ்ரேல், ஈரான் நாட்டில் உள்ள இந்தியா்களை பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும்

போா் சூழலில் உள்ள இஸ்ரேல் மற்றும் ஈரான் நாட்டில் இருக்கும் இந்தியா்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளா் ஈ. ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா். இது கு... மேலும் பார்க்க

மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

கோவை மாநகரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சரவணம்பட்டி போலீஸாா் ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, சின்னவேடம்பட்டியில் உள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

பேரூா் அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழந்தனா். கோவை அருகேயுள்ள பேரூா் பச்சாபாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் (30), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (27). இவா்களு... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் இளைஞா் சடலம் மீட்பு

கோவை, ரத்தினபுரியில் பூட்டிய வீட்டில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (39). இவா் ரத்தினபுரி முத்... மேலும் பார்க்க