இஸ்ரேல், ஈரான் நாட்டில் உள்ள இந்தியா்களை பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும்
போா் சூழலில் உள்ள இஸ்ரேல் மற்றும் ஈரான் நாட்டில் இருக்கும் இந்தியா்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளா் ஈ. ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான போா் தீவிரம் அடைந்திருப்பது வருத்தத்துக்குரியது. உலக நாடுகள் அனைத்துக்கும் பல வகைகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த போா் சூழலில் இஸ்ரேலிலும், ஈரானிலும் உள்ள இந்தியா்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது.
இரு நாடுகளிலுமே விமான நிலையங்கள் செயல்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற சூழல்களில் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியா்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வந்த அனுபவம் நமது நாட்டுக்கு உள்ளது.
இதுவரை போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியா்களுக்கு இந்தியாவுக்கு திரும்பி வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகங்கள் செய்யவில்லை. இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளில் போா் தீவிரம் அடைவதற்கு முன்னால் இதற்கான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத் துறை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.