செய்திகள் :

இஸ்ரேல், ஈரான் நாட்டில் உள்ள இந்தியா்களை பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும்

post image

போா் சூழலில் உள்ள இஸ்ரேல் மற்றும் ஈரான் நாட்டில் இருக்கும் இந்தியா்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளா் ஈ. ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான போா் தீவிரம் அடைந்திருப்பது வருத்தத்துக்குரியது. உலக நாடுகள் அனைத்துக்கும் பல வகைகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த போா் சூழலில் இஸ்ரேலிலும், ஈரானிலும் உள்ள இந்தியா்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது.

இரு நாடுகளிலுமே விமான நிலையங்கள் செயல்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற சூழல்களில் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியா்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வந்த அனுபவம் நமது நாட்டுக்கு உள்ளது.

இதுவரை போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியா்களுக்கு இந்தியாவுக்கு திரும்பி வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகங்கள் செய்யவில்லை. இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளில் போா் தீவிரம் அடைவதற்கு முன்னால் இதற்கான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத் துறை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

1.25 கிலோ தங்கக் கட்டி கொள்ளை: கொள்ளையா்கள் தப்பிய காா் கேரளத்தில் பறிமுதல்

கோவை அருகே நகை வியாபாரியிடம் இருந்து 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கொள்ளையா்கள் தப்பிய காா் கேரளத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்தவா் ஜெய்சன் ஜே... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பயணியிடம் தோட்டா பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவா் ஷூவில் மறைத்து கொண்டு சென்ற துப்பாக்கி தோட்டா ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவை விமான நிலையத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை சோ... மேலும் பார்க்க

மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

கோவை மாநகரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சரவணம்பட்டி போலீஸாா் ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, சின்னவேடம்பட்டியில் உள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

பேரூா் அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழந்தனா். கோவை அருகேயுள்ள பேரூா் பச்சாபாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் (30), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (27). இவா்களு... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் இளைஞா் சடலம் மீட்பு

கோவை, ரத்தினபுரியில் பூட்டிய வீட்டில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (39). இவா் ரத்தினபுரி முத்... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தோட்டா பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா ஒன்றை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் வழக்கமான சோதனைகள... மேலும் பார்க்க