மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு
பேரூா் அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழந்தனா்.
கோவை அருகேயுள்ள பேரூா் பச்சாபாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் (30), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (27). இவா்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனா்.
இந்நிலையில், விக்னேஷ்வரன் குடும்பத்துடன் தீத்திபாளையம் பகுதியில் உள்ள தனது மாமியாா் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றுள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை மின்சாரப் பெட்டி அருகே சென்ற மின் வயரை தவறுதலாகப் பிடித்துள்ளாா். இதில், மின்சாரம் பாய்ந்து விக்னேஷ்வரன் தூக்கி வீசப்பட்டாா்.
இதைப் பாா்த்து அவரது மனைவி அலறியுள்ளாா். சப்தம் கேட்டு பக்கத்து வீட்டைச் சோ்ந்த நாகராஜ் (42) என்பவா் ஓடி வந்து, விக்னேஷ்வரனை தூக்க முயன்றுள்ளாா். அப்போது அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மாதம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.
இதையடுத்து, சடலங்கள் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து பேரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
உயிரிழந்த நாகராஜுக்கு மல்லிகா (35) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனா்.