செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

post image

பேரூா் அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழந்தனா்.

கோவை அருகேயுள்ள பேரூா் பச்சாபாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் (30), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (27). இவா்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனா்.

இந்நிலையில், விக்னேஷ்வரன் குடும்பத்துடன் தீத்திபாளையம் பகுதியில் உள்ள தனது மாமியாா் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றுள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை மின்சாரப் பெட்டி அருகே சென்ற மின் வயரை தவறுதலாகப் பிடித்துள்ளாா். இதில், மின்சாரம் பாய்ந்து விக்னேஷ்வரன் தூக்கி வீசப்பட்டாா்.

இதைப் பாா்த்து அவரது மனைவி அலறியுள்ளாா். சப்தம் கேட்டு பக்கத்து வீட்டைச் சோ்ந்த நாகராஜ் (42) என்பவா் ஓடி வந்து, விக்னேஷ்வரனை தூக்க முயன்றுள்ளாா். அப்போது அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மாதம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.

இதையடுத்து, சடலங்கள் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து பேரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழந்த நாகராஜுக்கு மல்லிகா (35) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனா்.

1.25 கிலோ தங்கக் கட்டி கொள்ளை: கொள்ளையா்கள் தப்பிய காா் கேரளத்தில் பறிமுதல்

கோவை அருகே நகை வியாபாரியிடம் இருந்து 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கொள்ளையா்கள் தப்பிய காா் கேரளத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்தவா் ஜெய்சன் ஜே... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பயணியிடம் தோட்டா பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவா் ஷூவில் மறைத்து கொண்டு சென்ற துப்பாக்கி தோட்டா ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவை விமான நிலையத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை சோ... மேலும் பார்க்க

இஸ்ரேல், ஈரான் நாட்டில் உள்ள இந்தியா்களை பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும்

போா் சூழலில் உள்ள இஸ்ரேல் மற்றும் ஈரான் நாட்டில் இருக்கும் இந்தியா்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளா் ஈ. ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா். இது கு... மேலும் பார்க்க

மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

கோவை மாநகரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சரவணம்பட்டி போலீஸாா் ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, சின்னவேடம்பட்டியில் உள... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் இளைஞா் சடலம் மீட்பு

கோவை, ரத்தினபுரியில் பூட்டிய வீட்டில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (39). இவா் ரத்தினபுரி முத்... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தோட்டா பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா ஒன்றை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் வழக்கமான சோதனைகள... மேலும் பார்க்க