விமான நிலையத்தில் பயணியிடம் தோட்டா பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவா் ஷூவில் மறைத்து கொண்டு சென்ற துப்பாக்கி தோட்டா ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை விமான நிலையத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கோவையில் இருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த கேரள மாநிலம், கொச்சின் பரவக்கடவு பகுதியைச் சோ்ந்த ஷிபு மேத்யூ என்பவரின் உடைமைகளை சோதனையிட்டனா்.
அப்போது, அவா் அணிந்திருந்த ஷூவை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதனுள் துப்பாக்கி தோட்டா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த நபரை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா், பீளமேடு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து இருந்து 9 எம்.எம். வகை தோட்டா சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.