செய்திகள் :

சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்தது! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

post image

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள் கிழமை) பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,034.45 என்ற புள்ளிகளில் தொடங்கி நிலையில் காலை 11.40 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 559.20 புள்ளிகள் உயர்ந்து 81,677.80
புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 81,781.89 புள்ளிகள் வரை சென்றது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 182.25 புள்ளிகள் உயர்ந்து 24,900.85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் பங்குகளில் ஓஎன்ஜிசி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், சிப்லா, ஸ்ரீராம் பைனான்ஸ், பவர் கிரிட் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

டாடா மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டி லேப்ஸ், எஸ்பிஐ, ஜியோ, அதானி என்டர்பிரைசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. நிஃப்டி ஐடி பங்குகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்காய், சீனாவின் ஷாங்காய், ஹாங்காங் பங்குச்சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இந்தோனேசியா, சிங்கப்பூர் சந்தைகளில் தற்போது சரிவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க | ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஹைதராபாத் விமானம்! ஏன்?

உலகளாவிய ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வுடன் முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை சரிந்து நிலையில், முதலீட்டாளர்கள் ஐடி மற்றும் எண்ணெய் பங்குகளில் வெகுவாக கொள்முதல் செய்ததையடுத்து பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃ... மேலும் பார்க்க

ரியல்மீயில் ரூ.10 ஆயிரத்துக்குக் கீழ் அதீத பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்!

ரியல்மீ நிறுவனத்தின் நர்ஸோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அதீத பேட்டரி திறனுடன் அறிமுகமாகவுள்ளது. பட்ஜெட் விலையில் ரூ. 10 ஆயிரத்துக்குக் கீழ் நிறைவான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்... மேலும் பார்க்க

விவோ ஒய் 400 5ஜி இந்தியாவில் அறிமுகமாவது எப்போது? சிறப்புகள் என்னென்ன?

விவோ நிறுவனத்தில் புதிதாக ஒய் 400 5ஜி என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.விவோ நிறுவனத்தின் புகழ் பெற்ற ஒய் வரிசையில் மீண்டு... மேலும் பார்க்க

விரைவில் அறிமுகமாகிறது ஒன்பிளஸ் பேட் லைட்! சிறப்புகள் என்னென்ன?

ஒன்பிளஸ் நிறுவனத்தில் புதிதாக கையடக்கக் கணினி (டேப்) அறிமுகமாகவுள்ளது. பேட் லைட் என்ற பெயரில், வரவுள்ள இந்த கையடக்கக் கணினியானது இதற்கு முன்பு வந்த ஒன்பிளஸ் பேட் கோ-வில் இருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

நான்கு நாள்களுக்குப் பிறகு குறைந்தது தங்கம் விலை!

சென்னை: கடந்த வாரம் தொடர்ந்து நான்கு நாள்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையாகிறது.சென்னையில் திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ... மேலும் பார்க்க

டாப் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1.65 லட்சம் கோடி இழப்பு!

புதுதில்லி: கடந்த வாரம் டாப் 10 மதிப்புமிக்க நிறுவனங்களின் 8 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடு ரூ.1,65,501.49 கோடியாக சரிந்த நிலையில், எச்.டி.எஃப்.சி வங்கியானது மிகப்பெரிய சரிவை பதிவு செய்தது... மேலும் பார்க்க