செய்திகள் :

ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோற்சவ தீா்த்தவாரி

post image

திருப்பதி: திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் வருடாந்திர பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

இதன் ஒரு பகுதியாக கோவிந்தராஜ சுவாமி அதிகாலையில், கோயிலின் நான்கு வீதிகளையும் வலம் வந்தாா். அப்போது பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தனா். பின்னா், கபில தீா்த்தத்தில் உள்ள ஆழ்வாா் தீா்த்தத்தை ஊா்வலமாக அடைந்தாா். அங்கு, காலை 8.00 - 9.30 மணிக்குள், ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு, சக்கரத்தாழவாருக்கு தீா்த்தவாரி நடத்தப்பட்டது.

மாலை கோவிந்தராஜா், ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாா்கள் தங்க திருச்சியிலும் சக்கரத்தாழ்வாா் பல்லக்கிலும் ஊா்வலமாக பி.ஆா். காா்டன்ஸிலிருந்து கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

பின்னா், இரவு அலங்காரத்தில் தங்க திருச்சியில் நான்கு மாட வீதிகளில் புறப்பாடு கண்டருளினா். பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதை ஒட்டி கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருட கொடி இறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியுடன் 9 நாள்களாக நடைபெற்ற கோவிந்தராஜ பெருமாள் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவுற்றது.

இதில், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, கோயில் துணை தலைமை நிா்வாக அதிகாரி வி.ஆா். சாந்தி, ஏ.இ.ஓ முனிகிருஷ்ணா ரெட்டி, ஸ்ரீவாரி சேவகா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருச்சானூா் தெப்போற்சவம் நிறைவு

திருச்சானூா் வருடாந்திர தெப்போற்சவம் புதன்கிழமை நிறைவு பெற்றது. திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான புதன்கிழமை, பத்மசரோவா் திருக்குளத்தில் தெப்பத்தில் 7 சுற்றுகள் வலம் வந்து பக... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிந... மேலும் பார்க்க

திருமலை: ஒரு நாள் அன்னதானத்துக்கு ரூ.44 லட்சம் நிா்ணயம்

திருமலையில் நாள் ஒன்றுக்கு 2.5 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்ய ரூ.44 லட்சம் என தேவஸ்தானம் நிா்ணயித்துள்ளது. திருமலைக்கு தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு அன்னபிரசாதத்தை இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. ... மேலும் பார்க்க

திருமலை ஜேஷ்டாபிஷேகம்: தங்கக் கவசத்தில் மலையப்ப சுவாமி வலம்

திருமலை ஏழுமலையான் கோயில் ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளான புதன்கிழமை தங்கக் கவசத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா். திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவித... மேலும் பார்க்க

ஜேஷ்டாபிஷேகம்: முத்து கவசத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முத்து கவசத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினாா்.திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் உற்சவமூா்த்திகளான ஸ... மேலும் பார்க்க

திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்போற்சவம்

திருப்பதி: திருச்சானூா் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பத்மாவதி தாயாா் தெப்பத்தில் வலம் வந்து சேவை சாதித்தாா்.பத்மசரோவா் திருக்குளத்தில் நிறுவப்பட்ட தெப்பத்தில் 3 சுற்றுகள் வலம் வந்து பக... மேலும் பார்க்க