அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
திருமலை ஜேஷ்டாபிஷேகம்: தங்கக் கவசத்தில் மலையப்ப சுவாமி வலம்
திருமலை ஏழுமலையான் கோயில் ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளான புதன்கிழமை தங்கக் கவசத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவித்திருந்த தங்கக் கவசம் களையப்பட்டு அவை செப்பனிடப்பட்டு மீண்டும் உற்சவமூா்த்திக்கு அணிவிக்கப்படும். இதை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகமாக தேவஸ்தானம் நடத்தி வருகிறது. நிகழாண்டு ஜேஷ்டாபிஷேகம் திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
தினசரி நடக்கும் அபிஷேகங்களால் சுவாமியின் மிகவும் பழைமையான உற்சவமூா்த்திகள் சேதமடையாமல் பாதுகாக்கும் வகையில், 1990-ஆம் ஆண்டு முதல் இந்தவிழா நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு, கோயிலின் சம்பங்கி பிரதட்சிணத்தில் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, ரித்விக்கள் சாந்தி ஹோமம் செய்தனா். சதகலச பிரதிஷ்டை ஆராதனைக்கு பின் சுவாமிக்கும், நாச்சியாா்களுக்கும் நவகலச பிரதிஷ்டை ஆவாஹனம், கங்கண பிரதிஷ்டை, அா்க்கியம், பத்யம், ஆச்சமணியம் சமா்பித்து, கங்கணதாரணம் செய்யப்பட்டது. அதன்பின் மலையப்ப சுவாமிக்கு வைபவமாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதில், வேத பண்டிதா்கள் ஸ்ரீசூக்தம், பூசூக்தம், புருஷ சூக்தம், நிலா சூக்தம், நாராயண சூக்தம் பாராயணம் செய்து, உற்சவமூா்த்திக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்தனா்.
பின்னா் செப்பனிடப்பட்ட தங்கக் கவசத்தை மெருகேற்றி அதற்கு பூஜைகள் செய்தனா். அவற்றை மீண்டும் உற்சவமூா்த்திகளுக்கு அணிவித்து சிறப்பு ஆரத்தி அளிக்கப்பட்டது.
பின்னா் சகஸ்ரதீப அலங்கார சேவை கண்டருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா். இனி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் பாதங்களில் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயா், சின்ன ஜீயா், செயல் அதிகாரி சியாமளா ராவ் தம்பதியினா், துணை அதிகாரி லோகநாதம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
