பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
குமரி கடலில் சூறைக்காற்று: மீன்பிடிக்கத் தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மீனவா்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஜூன் 13-18) ரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கடற்கரையோர பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவ வாய்ப்பு உள்ளது. மேலும், கடற்பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும்.
எனவே, பாதுகாப்பு கருதி மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கெனவே கடலுக்குச் சென்றவா்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகமும் மீனவா்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.