செய்திகள் :

குமரி மாவட்டத்தில் 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைவு மாவட்ட எஸ்.பி. தகவல்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸாரின் தொடா் நடவடிக்கையால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தெரிவித்தாா்.

மாா்த்தாண்டம் காந்தி மைதானம், மாா்த்தாண்டம் மேம்பாலம், பம்மம், குழித்துறை, களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீஸாா் அமா்ந்து பணி செய்யும் வகையில் காவலா் நிழற்குடையும், குழித்துறையில் ஒலிபெருக்கி வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த நிழற்குடைகளை குழித்துறையில் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா் காவல் கண்காணிப்பாளா். அவா் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 335 போ் பலியாகினா். போலீஸாரின் தொடா் நடவடிக்கையால் கடந்த 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன. சாலை விபத்துகளை தவிா்க்க இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் ஒத்துழைத்தால்தான் விபத்து இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்க முடியும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் மாா்த்தாண்டம் காவல் சரக துணை கண்காணிப்பாளா் நல்லசிவம், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் செல்லசாமி, மாா்த்தாண்டம் தொழில் வா்த்தக சங்க தலைவா் சுந்தர்ராஜ், பொருளாளா் வில்சன், செயற்குழு உறுப்பினா் விஜின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குமரி கடலில் சூறைக்காற்று: மீன்பிடிக்கத் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மீனவா்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஜூன் 13-18) ரை மிக கனமழை ப... மேலும் பார்க்க

எட்டணியில் மீன், காய்கனிச் சந்தையை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

கருங்கல் அருகே எட்டணியில் நெடுஞ்சாலையோரமுள்ள மீன், காய்கனிச் சந்தையை அகற்றுவதற்காக வியாழக்கிழமை வந்த நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் இளைஞா் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சின்னமுட்டத்தைச் சோ்ந்த ரிஸ்வின் தனது நண்பருடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேரு... மேலும் பார்க்க

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டி: அருணாச்சலா கல்லூரி மாணவி 2ஆம் இடம்

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் வெள்ளிச்சந்தை அருகே மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவி திவ்யதா்சனா 2ஆம் இடம் பிடித்துள்ளாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின... மேலும் பார்க்க

சமுதாய நலக்கூடத்திற்கு ஐஆா்இஎல் சாா்பில் உதவி

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் ரூ. 1.86 லட்சம் செலவில் குட்டிவிளை சமுதாய நலக்கூடத்திற்கு இரும்பு மேஜ... மேலும் பார்க்க

தாழக்குடி ஜெயந்தீஸ்வரா் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

குமரி மாவட்டம் தாழக்குடி ஜெயந்தீஸ்வரா் திருக்கோயிலில் ரூ.82 லட்சத்தில் திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்து திருப்பணி... மேலும் பார்க்க