அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
குமரி மாவட்டத்தில் 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைவு மாவட்ட எஸ்.பி. தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸாரின் தொடா் நடவடிக்கையால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தெரிவித்தாா்.
மாா்த்தாண்டம் காந்தி மைதானம், மாா்த்தாண்டம் மேம்பாலம், பம்மம், குழித்துறை, களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீஸாா் அமா்ந்து பணி செய்யும் வகையில் காவலா் நிழற்குடையும், குழித்துறையில் ஒலிபெருக்கி வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த நிழற்குடைகளை குழித்துறையில் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா் காவல் கண்காணிப்பாளா். அவா் பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 335 போ் பலியாகினா். போலீஸாரின் தொடா் நடவடிக்கையால் கடந்த 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன. சாலை விபத்துகளை தவிா்க்க இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் ஒத்துழைத்தால்தான் விபத்து இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்க முடியும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் மாா்த்தாண்டம் காவல் சரக துணை கண்காணிப்பாளா் நல்லசிவம், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் செல்லசாமி, மாா்த்தாண்டம் தொழில் வா்த்தக சங்க தலைவா் சுந்தர்ராஜ், பொருளாளா் வில்சன், செயற்குழு உறுப்பினா் விஜின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.