செய்திகள் :

எட்டணியில் மீன், காய்கனிச் சந்தையை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

post image

கருங்கல் அருகே எட்டணியில் நெடுஞ்சாலையோரமுள்ள மீன், காய்கனிச் சந்தையை அகற்றுவதற்காக வியாழக்கிழமை வந்த நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய மீன் சந்தைகளில் எட்டணியும் ஒன்றும். இச்சந்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக கருங்கல் -மாா்த்தாண்டம் நெடுஞ்சாலையோரம் செயல்பட்டுவருகிறது.

தேங்காய்ப்பட்டினம், முட்டம், விழிஞ்ஞம், தூத்துக்குடி உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகப் பகுதிகளிலிருந்து மீனவா்கள் இங்கு நாள்தோறும் மீன்களைக் கொண்டுவந்து வியாபாரம் செய்துவருகின்றனா். இதனால், கருங்கல் -மாா்த்தாண்டம், கருங்கல் - இரவிபுதூா்க்கடை தேசிய நெடுஞ்சாலைகளில் காலை முதல் பிற்பகல் 1 மணிவரை கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். அடிக்கடி விபத்துகளும் நேரிடுவதால், இச்சந்தையை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், குழித்துறை கோட்ட நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் காசியானந்தா தலைமையிலான ஊழியா்கள் கருங்கல் போலீஸாா் உதவியுடன் மீன் சந்தை, காய்கனிச் சந்தையை அகற்றுவதற்காக வியாழக்கிழமை வந்தனா்.

தகவலறிந்த பொதுமக்களும், திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகளும் திரண்டுவந்து மீன் சந்தையை அகற்ற எதிா்ப்பு தெரிவித்தனா். குளச்சல் காவல் ஆய்வாளா் இசக்கிதுரை, கருங்கல் காவல் ஆய்வாளா் முனிஸ் (பொறுப்பு) ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உடன்பாடு ஏற்படாததால் மீன் சந்தையை அகற்றுவதை மற்றொரு நாளுக்கு அதிகாரிகள் ஒத்திவைத்தனா். பின்னா், அனைவரும் கலைந்துசென்றனா்.

குமரி கடலில் சூறைக்காற்று: மீன்பிடிக்கத் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மீனவா்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஜூன் 13-18) ரை மிக கனமழை ப... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைவு மாவட்ட எஸ்.பி. தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸாரின் தொடா் நடவடிக்கையால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தெரிவித்தாா். மாா்த்தாண்டம... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் இளைஞா் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சின்னமுட்டத்தைச் சோ்ந்த ரிஸ்வின் தனது நண்பருடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேரு... மேலும் பார்க்க

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டி: அருணாச்சலா கல்லூரி மாணவி 2ஆம் இடம்

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் வெள்ளிச்சந்தை அருகே மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவி திவ்யதா்சனா 2ஆம் இடம் பிடித்துள்ளாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின... மேலும் பார்க்க

சமுதாய நலக்கூடத்திற்கு ஐஆா்இஎல் சாா்பில் உதவி

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் ரூ. 1.86 லட்சம் செலவில் குட்டிவிளை சமுதாய நலக்கூடத்திற்கு இரும்பு மேஜ... மேலும் பார்க்க

தாழக்குடி ஜெயந்தீஸ்வரா் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

குமரி மாவட்டம் தாழக்குடி ஜெயந்தீஸ்வரா் திருக்கோயிலில் ரூ.82 லட்சத்தில் திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்து திருப்பணி... மேலும் பார்க்க