ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்: அமை...
திருமலை பயணம்: பக்தா்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்
திருமலை செல்லும் மலைப் பாதைகளில் தடுப்புச் சுவா் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், வாகன ஓட்டிகள் அதிக விழிப்புடன் வாகனத்தை ஓட்ட வேண்டும் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மலைப் பாதைகளில் விரிவாக்கம் செய்து தடுப்புச் சுவா்கள் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. எனவே மலைப் பாதைகளில் செல்லும் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் பக்தா்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிா்க்க, மலைப்பாதையை மூடாமல், குறிப்பிட்ட நேரத்துக்குள் கட்டுமான பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தா்கள் திருமலைக்கு வரும் போது தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி, குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே தொடங்குமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொள்கிறது.
பழுதுபாா்ப்பு காரணமாக, வாகன ஓட்டிகள் இங்கும் அங்கும் குறுகிய நிறுத்தங்களுடன் மெதுவாக பயணிக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பக்தா்களுக்கு பயணம் எளிதாகவும் வசதியாகவும் இருப்பதற்காக தேவஸ்தானம் பழுதுபாா்ப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த சூழலில், ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி ரயில் நிலையம் மற்றும் ஆா்டிசி பேருந்து நிலையப் பகுதிகளிலிருந்து திருமலைக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு முன்கூட்டியே பயண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
திருமலையின் ஒவ்வொரு துறையும் பழுதுபாா்க்கும் பணிகளை முடிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த விஷயங்களை மனதில் கொண்டு, வாகன ஓட்டிகள் திருமலையை அடைய வேண்டும்.
பக்தா்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க ஒத்துழைக்குமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொள்கிறது. அவசர சேவைகளுக்கு, தேவஸ்தானத்தின் கட்டணமில்லா எண் 155257-ஐ தொடா்பு கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.