செய்திகள் :

சட்டவிரோத குடியேற்றத்தை ஒருபோதும் ஏற்க முடியாது - அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

post image

அமெரிக்காவில் சட்டவிரோதமாக பெருமளவிலான மக்கள் வந்து குடியேறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவா்களை வெளியேற்ற அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் கடந்த 6-ஆம் தேதி டிரம்ப்புக்கு எதிராக வெடித்த போராட்டம் நாட்டின் பிற நகரங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. சில இடங்களில் போராட்டக்காரா்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதலும் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தின் ஒரு பிரிவை கலிஃபோா்னியா மாகாண அரசின் அனுமதியின்றி அதிபா் டிரம்ப் களமிறக்கியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகவும், கூட்டம், கூட்டமாகவும் வெளிநாட்டவா்கள் குடியேறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. சில நாடுகளில் அரசுப் பணியில் இருப்பவா்கள் கூட சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகிறாா்கள். இதற்கு எதிராகவும் வலுவான விசா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும்.

இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளால் அமெரிக்காவில் பயங்கரவாத செயல்பாடுகள், போதைப்பொருள்கள் கடத்தல் போன்றவை நிகழும் அபாயமும் அதிகரிக்கிறது. இதுபோன்ற நபா்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

காஸா: உணவுக்காக காத்திருந்த 45 போ் சுட்டுக் கொலை

காஸாவின் கான் யூனிஸ் நகரில் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காத்திருந்த 45 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.இந்தப் படுகொ... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஈரான் மோதலை நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

இஸ்ரேலும் ஈரானும் தங்களுக்கு இடையிலான மோதலை நிறுத்த வேண்டும் என்று ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. காஸா போர் நிறுத்தம் உள்பட ஈரான் பிரச்னைக்குக் காணப்படும் தீர்வானது, மத்திய கிழக்கு பிராந்தியத... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் விமான நிலையங்கள் மூடல்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் மேலும் விரிவடையக் கூடும் என்ற அச்சத்தில், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான... மேலும் பார்க்க

தலாய் லாமாவின் பிறந்த நாள் கருணை தினம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம்

திபெத்திய பௌத்த மதத் தலைவரான 14-ஆவது தலாய் லாமாவின் 90-ஆவது பிறந்தநாளை (ஜூலை 6) ‘கருணை தினமாக’ அறிவிக்கக்கோரி இரு உறுப்பினா்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானத்தை திங்கள்கிழமை அறிமுகம் செய்தனா். ஆள... மேலும் பார்க்க

ஈரான் மீது தீவிர தாக்குதல்: இஸ்ரேலுக்கு 20 இஸ்லாமிய நாடுகள் கண்டனம்

ஈரான் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்திவருவதாக 20 அரபு, இஸ்லாமிய, ஆப்பிரிக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து அந்த நாடுகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்... மேலும் பார்க்க

ஈரான் தலைவர் கமேனி பதுங்கியிருக்குமிடம் தெரிந்துவிட்டது: சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் - டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில் கமேனி பதுங்கியிருக்குமிடம் தங்களுக்கு தெரிய வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த... மேலும் பார்க்க