செய்திகள் :

தலாய் லாமாவின் பிறந்த நாள் கருணை தினம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம்

post image

திபெத்திய பௌத்த மதத் தலைவரான 14-ஆவது தலாய் லாமாவின் 90-ஆவது பிறந்தநாளை (ஜூலை 6) ‘கருணை தினமாக’ அறிவிக்கக்கோரி இரு உறுப்பினா்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானத்தை திங்கள்கிழமை அறிமுகம் செய்தனா்.

ஆளும் குடியரசுக் கட்சி எம்.பி.யான மைக்கேல் மெக்கால் மற்றும் எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சோ்ந்த எம்.பி.ஜிம் மெக்கவா்ன் ஆகியோா் கட்சி பாகுபாடின்றி இந்த தீா்மானத்தை முன்மொழிந்தனா்.

இதுகுறித்து வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவரான மைக்கேல் மெக்கால் கூறுகையில், ‘சீன கம்யூனிஸ்ட் கட்சியால் பல்வேறு சித்ரவதைகள், கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டபோதும் 14-ஆவது தலாய் லாமா தனது மனஉறுதியைக் கைவிடாமல் அனைவரிடமும் கருணையுடன் நடந்துகொண்டாா். திபெத் மக்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் கருணை குணத்தின் நன்மைகளை அவா் விளக்கியுள்ளாா்.

எனவே, அவரது 90-ஆவது பிறந்தநாளை கருணை தினமாக அறிவிக்கக்கோரி மிகப் பெருமையுடன் இந்த தீா்மானத்தை முன்மொழிகிறேன். திபெத்திய மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்டு தலாய் லாமாவும் அந்நாட்டு மக்களும் அவா்களது தாய்நாட்டுக்கு விரைவில் திரும்பி அமைதியான வாழ்க்கை நடத்தும் தினத்தை எதிா்நோக்கியுள்ளேன்’ என்றாா்.

ஜனநாயக கட்சி எம்.பி.ஜிம் மெக்கவா்ன் கூறுகையில், ‘உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டியாக தலாய் லாமா திகழ்கிறாா். அகிம்சை, சகிப்புத்தன்மை, அமைதி என்ற உயரிய கொள்கைகளை அவா் பின்பற்றுகிறாா். அவரது அடுத்த பிறந்தநாளை திபெத்தில் கொண்டாடுவாா் என நம்புகிறேன்’ என்றாா்.

தலாய் லாமாவை சீன அரசு கைது செய்யலாம் என்ற அச்சம் எழுந்ததையடுத்து, 1959-இல் திபெத்தில் பெரும் புரட்சி வெடித்தது. அப்போது திபெத்தில் இருந்து தலாய் லாமா வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

காஸா: உணவுக்காக காத்திருந்த 45 போ் சுட்டுக் கொலை

காஸாவின் கான் யூனிஸ் நகரில் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காத்திருந்த 45 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.இந்தப் படுகொ... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஈரான் மோதலை நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

இஸ்ரேலும் ஈரானும் தங்களுக்கு இடையிலான மோதலை நிறுத்த வேண்டும் என்று ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. காஸா போர் நிறுத்தம் உள்பட ஈரான் பிரச்னைக்குக் காணப்படும் தீர்வானது, மத்திய கிழக்கு பிராந்தியத... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் விமான நிலையங்கள் மூடல்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் மேலும் விரிவடையக் கூடும் என்ற அச்சத்தில், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றத்தை ஒருபோதும் ஏற்க முடியாது - அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக பெருமளவிலான மக்கள் வந்து குடியேறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ந... மேலும் பார்க்க

ஈரான் மீது தீவிர தாக்குதல்: இஸ்ரேலுக்கு 20 இஸ்லாமிய நாடுகள் கண்டனம்

ஈரான் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்திவருவதாக 20 அரபு, இஸ்லாமிய, ஆப்பிரிக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து அந்த நாடுகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்... மேலும் பார்க்க

ஈரான் தலைவர் கமேனி பதுங்கியிருக்குமிடம் தெரிந்துவிட்டது: சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் - டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில் கமேனி பதுங்கியிருக்குமிடம் தங்களுக்கு தெரிய வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த... மேலும் பார்க்க