செய்திகள் :

பாகிஸ்தான்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! தடம் புரண்ட பெட்டிகள்!

post image

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து அதன் பாதையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 6 பெட்டிகள் தடம் புரண்டன.

பெஷாவரிலிருந்து பலுசிஸ்தானின் குவேட்டா நோக்கி ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (ஜூன் 18) சென்று கொண்டிருந்தது. ஜகோபாபாத் பகுதியில் கால்நடை சந்தைக்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலினால், ரயில் பாதையில் 3 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதுடன், 6 அடி நீளத்துக்கு தண்டவாளம் சேதமடைந்து, ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில், ரயிலின் பயணிகள் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், அந்த வழியில் தற்போது ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதுடன், தாக்குதல் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிந்து மாகாணத்தில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பெரும்பாலும் பலூசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி எனும் அமைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, கடந்த 4 மாதங்களில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது 2 - வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 11 ஆம் தேதியன்று 33 பலூசிஸ்தான் தீவிரவாதிகளால் இந்த ரயிலானது கடத்தப்பட்டது.

பின்னர், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதல் நடவடிக்கைகளின் மூலம் 33 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு, ரயிலும் அதன் பயணிகளும் மீட்கப்பட்டனர். ஆனால், 21 பயணிகள் மற்றும் 4 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஈரான் ஒருபோதும் சரணடையாது: டிரம்ப்புக்கு கமேனி பதில்

பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் பேசியது என்ன? டிரம்ப் பேட்டி

பாகிஸ்தான் ராணுவ தளபதி உடனான சந்திப்பின்போது பேசியது என்ன என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் 5 நாள்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்காவு... மேலும் பார்க்க

ஈரான் ஒருபோதும் சரணடையாது: டிரம்ப்புக்கு கேமேனி பதில்

இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஈரான் ஒருபோதும் சரணடையாது என அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்கா தலை... மேலும் பார்க்க

பி-2 பாம்பர்ஸ் விமானங்கள் புறப்பட்டன? ஈரானின் நிலவறைகளை அழிக்கத் திட்டமா?

அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான பி -2 பாம்பர்ஸ் விமானங்கள் ஈரானின் அணுசக்தி உற்பத்தி நிலவறைகளை அழிக்கப் புறப்பட்டிருக்கலாம்.ஏனெனில், இந்தியப் பெருங்கடலில் உள்ள டீகோ கார்சியா என்ற தீவில் நிறுத்திவை... மேலும் பார்க்க

2024-ல் டிரம்பை ஆதரித்த வாக்காளர்களில் 64% பேர் போருக்கு எதிராக உள்ளனர்!

இஸ்ரேல் - ஈரான் போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டில் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் 64 சதவீதம் பேர் போருக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் ... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு! மக்கள் வெளியேற்றம்.. விமானங்கள் ரத்து!

இந்தோனேசியா நாட்டிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்து அப்பகுதி முழுவதும் சாம்பல் படலம் மற்றும் புகைப் பரவியதால், அங்குள்ள ஏராளமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தோனே... மேலும் பார்க்க

கமேனி ஒருவேளை கொல்லப்பட்டால்... ஈரானின் புதிய தலைவர் பதவி யாருக்கு?

ஈரான் மதகுரு அயத்துல்லா அலி கமேனி ஒருவேளை கொல்லப்பட்டால் ஈரானின் புதிய தலைவராக யார் தேர்தெடுக்கப்படுவார்கள் என கருத்துகள் எழுந்திருக்கின்றன.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெ... மேலும் பார்க்க