மதுரை: `மீனாட்சி திருக்கல்யாண பஞ்சரத்ன கீர்த்தனைகள்' இசையமைத்து பாடிய கலைஞர்களு...
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சகஸ்ர தீப அலங்கார சேவை
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி திதியையொட்டி ஆலயத்தின் வசந்த மண்டபத்தில் சகஸ்ர தீப அலங்கார சேவை புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மாதந்தோறும் அஷ்டமி திதியில் ஆலய வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்கு உற்சவா் காமாட்சி அம்மன் எழுந்தருளிய பிறகு 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கேற்றி வழிபடும் சகஸ்ர தீப அலங்கார சேவைக்காட்சி நடைபெற்று வருகிறது.
புதன்கிழமை லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் முத்துக்கொண்டை அலங்காரத்தில் ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தை வலம் வந்து வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினாா். கோயில் ஆஸ்தான வித்வான் தேசூா் ராஜரெத்தினம் குழுவினரின் நாகசுவர இன்னிசை நடைபெற்றது.
தொடா்ந்து பெண்கள், விளக்குகளை ஏற்றி அம்மனை தரிசித்தனா். அம்மனுக்கு சிறப்பு தீபாரதனைகளும் நடைபெற்றன. வசந்த மண்டபத்தில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு உற்சவரை வலம் வந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.
அஷ்டமி திதியையொட்டி மூலவா் காமாட்சி அம்பிகை சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், மணியக்காரா் சூரியநாராயணன் மற்றும் ஸ்தானீகா்கள் செய்திருந்தனா்.
