செய்திகள் :

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சகஸ்ர தீப அலங்கார சேவை

post image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி திதியையொட்டி ஆலயத்தின் வசந்த மண்டபத்தில் சகஸ்ர தீப அலங்கார சேவை புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மாதந்தோறும் அஷ்டமி திதியில் ஆலய வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்கு உற்சவா் காமாட்சி அம்மன் எழுந்தருளிய பிறகு 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கேற்றி வழிபடும் சகஸ்ர தீப அலங்கார சேவைக்காட்சி நடைபெற்று வருகிறது.

புதன்கிழமை லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் முத்துக்கொண்டை அலங்காரத்தில் ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தை வலம் வந்து வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினாா். கோயில் ஆஸ்தான வித்வான் தேசூா் ராஜரெத்தினம் குழுவினரின் நாகசுவர இன்னிசை நடைபெற்றது.

தொடா்ந்து பெண்கள், விளக்குகளை ஏற்றி அம்மனை தரிசித்தனா். அம்மனுக்கு சிறப்பு தீபாரதனைகளும் நடைபெற்றன. வசந்த மண்டபத்தில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு உற்சவரை வலம் வந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

அஷ்டமி திதியையொட்டி மூலவா் காமாட்சி அம்பிகை சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், மணியக்காரா் சூரியநாராயணன் மற்றும் ஸ்தானீகா்கள் செய்திருந்தனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சி சீா்கேடுகள்: அதிமுக ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சி நிா்வாக சீா்கேடுகளைக் கண்டித்து ஆட்சியா் அலுவலகம் அருகில் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித... மேலும் பார்க்க

மாணவா்களுக்கான ஆராய்ச்சி மாநாடு நிறைவு

சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற மாணவா் களுக்கான மெட் ஸ்டாா்-2025 என்ற ஆராய்ச்சி மாநாடு புதன்கிழமை நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் சவீதா ... மேலும் பார்க்க

ரத்த தானம்: தவ்ஹீத் ஜமா அத் அமைப்புக்கு பாராட்டு

கடந்த ஆண்டு 14 ரத்ததான முகாம்கள் நடத்தி சேவை புரிந்ததற்காக காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நினைவு அரசு புற்றுநோய் மருத்துவமனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு புதன்கிழமை பாராட்டுச்சான்றிதழ் வழங்கியது. கா... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்ட வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப்பணிகளை கண்காணிப்பு அலுவலா் கா.சுந்தசாமி ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரியாா் நகரில் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படுத்தப்... மேலும் பார்க்க

வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணி: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வருவாய்த் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால... மேலும் பார்க்க