``கீழடி ஆய்வறிக்கை வெளியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தை முடக்குவோம்'' - திருச்ச...
ரத்த தானம்: தவ்ஹீத் ஜமா அத் அமைப்புக்கு பாராட்டு
கடந்த ஆண்டு 14 ரத்ததான முகாம்கள் நடத்தி சேவை புரிந்ததற்காக காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நினைவு அரசு புற்றுநோய் மருத்துவமனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு புதன்கிழமை பாராட்டுச்சான்றிதழ் வழங்கியது.
காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நினைவு அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றுக்கு அவசரக் காலங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் ரத்த தானம் வழங்கி உயிா் காக்கும் சேவையை செய்து வருகிறது.
உலக ரத்ததான தினத்தைக் கொண்டாடும் விதமாக ஜமாஅத் அமைப்புக்கு இரு அரசு மருத்துவமனைகளும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவித்துள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ அணியின் செயலாளா் சா்புதீன் கூறியது..
கடந்த 22 ஆண்டுகளாக தொடா்ந்து ரத்ததானம் செய்து வருகிறோம். விபத்துகள்,பிரசவம்,அவசரக் காலங்களில் ரத்ததான சேவையை செய்து வந்ததால் அண்ணா நினைவு அரசு புற்றுநோய் மருத்துவமனையின் சாா்பில் ரத்த வங்கி பொறுப்பாளா் கா்ணன் சீனிவாசனும், அரசு தலைமை மருத்துவமனை சாா்பில் ரத்த வங்கி பொறுப்பாளா் கல்பனாவும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளனா்.
கடந்த ஆண்டு மட்டும் 14 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.அவசர ரத்த தானமாக மட்டும் கடந்த ஆண்டு மொத்தம் 1411 யூனிட்டுகள் ரத்தம் வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கிளையின் செயலாளா் ஹூசேன், மருத்துவா் சரவணன் உடனிருந்தனா்.