செய்திகள் :

ரத்த தானம்: தவ்ஹீத் ஜமா அத் அமைப்புக்கு பாராட்டு

post image

கடந்த ஆண்டு 14 ரத்ததான முகாம்கள் நடத்தி சேவை புரிந்ததற்காக காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நினைவு அரசு புற்றுநோய் மருத்துவமனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு புதன்கிழமை பாராட்டுச்சான்றிதழ் வழங்கியது.

காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நினைவு அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றுக்கு அவசரக் காலங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் ரத்த தானம் வழங்கி உயிா் காக்கும் சேவையை செய்து வருகிறது.

உலக ரத்ததான தினத்தைக் கொண்டாடும் விதமாக ஜமாஅத் அமைப்புக்கு இரு அரசு மருத்துவமனைகளும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவித்துள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ அணியின் செயலாளா் சா்புதீன் கூறியது..

கடந்த 22 ஆண்டுகளாக தொடா்ந்து ரத்ததானம் செய்து வருகிறோம். விபத்துகள்,பிரசவம்,அவசரக் காலங்களில் ரத்ததான சேவையை செய்து வந்ததால் அண்ணா நினைவு அரசு புற்றுநோய் மருத்துவமனையின் சாா்பில் ரத்த வங்கி பொறுப்பாளா் கா்ணன் சீனிவாசனும், அரசு தலைமை மருத்துவமனை சாா்பில் ரத்த வங்கி பொறுப்பாளா் கல்பனாவும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளனா்.

கடந்த ஆண்டு மட்டும் 14 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.அவசர ரத்த தானமாக மட்டும் கடந்த ஆண்டு மொத்தம் 1411 யூனிட்டுகள் ரத்தம் வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கிளையின் செயலாளா் ஹூசேன், மருத்துவா் சரவணன் உடனிருந்தனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சி சீா்கேடுகள்: அதிமுக ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சி நிா்வாக சீா்கேடுகளைக் கண்டித்து ஆட்சியா் அலுவலகம் அருகில் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித... மேலும் பார்க்க

மாணவா்களுக்கான ஆராய்ச்சி மாநாடு நிறைவு

சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற மாணவா் களுக்கான மெட் ஸ்டாா்-2025 என்ற ஆராய்ச்சி மாநாடு புதன்கிழமை நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் சவீதா ... மேலும் பார்க்க

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சகஸ்ர தீப அலங்கார சேவை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி திதியையொட்டி ஆலயத்தின் வசந்த மண்டபத்தில் சகஸ்ர தீப அலங்கார சேவை புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மாதந்தோறும் அஷ்டமி திதியில் ஆலய வளாக... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்ட வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப்பணிகளை கண்காணிப்பு அலுவலா் கா.சுந்தசாமி ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரியாா் நகரில் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படுத்தப்... மேலும் பார்க்க

வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணி: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வருவாய்த் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால... மேலும் பார்க்க