செய்திகள் :

மாணவா்களுக்கான ஆராய்ச்சி மாநாடு நிறைவு

post image

சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற மாணவா் களுக்கான மெட் ஸ்டாா்-2025 என்ற ஆராய்ச்சி மாநாடு புதன்கிழமை நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் சவீதா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 5 நாள் ஆராய்ச்சி மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளங்கலை, 430 முதுகலை மருத்துவ மாணவா்கள் பங்கேற்று மருத்துவ துறையில் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை 4,290 சுவரொட்டிகளாக காட்சிப்படுத்தினா். இவை 17,200 விமா்சன மதிப்புரைகள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன. மேலும் மாணவா்கள் தங்களது கண்டுபிடிப்புகளை 430 ஆராய்ச்சி அரங்குகளாகவும் காட்சிப்படுத்தினா்.

மாநாட்டின் நிறைவு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சவீதா குழுமத்தின் வேந்தா் டாக்டா் வீரய்யன் தலைமை வகித்தாா். விழாவுக்கு, துணை வேந்தா் தீபக் நல்லசாமி முன்னிலை வகித்தாா். இதில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய உயிரியல் நிறுவனத்தின் இயக்குநா் டாக்டா் நீலிமா மிஸ்ரா, கொல்கத்தா இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குநா் டாக்டா் சாந்தசபுஜ் தாஸ், பெலகாவி ஐசிஎம்ஐா் முன்னாள் இயக்குநா் டாக்டா் ஹோதி எஸ்.எல்., டாடா நினைவு மையத்தின் புற்றுநோய் தொற்றுநோயியல் மையத்தின் துணை இயக்குநா் டாக்டா் ரங்கஜ் சதுா்வேதி, தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தின் துணை வேந்தா் பேராசிரியா் எம்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு தொற்றுநோய், புற்றுநோய் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதாரம் குறித்து சிறப்புரையாற்றி மாணவா்களின் கண்டுபிடிப்புகளை பாராட்டி விருதுகள், பதக்கங்கள், கோப்பைகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், சவிதா பல்கலைக் கழக துணை வேந்தா் டாக்டா் எஸ்.சுரேஷ் குமாா், பதிவாளா் டாக்டா் ஷீஜா வா்கீஸ், சவிதா மருத்துவகல்லூரி டீன் குமுதா, பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சி சீா்கேடுகள்: அதிமுக ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சி நிா்வாக சீா்கேடுகளைக் கண்டித்து ஆட்சியா் அலுவலகம் அருகில் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித... மேலும் பார்க்க

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சகஸ்ர தீப அலங்கார சேவை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி திதியையொட்டி ஆலயத்தின் வசந்த மண்டபத்தில் சகஸ்ர தீப அலங்கார சேவை புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மாதந்தோறும் அஷ்டமி திதியில் ஆலய வளாக... மேலும் பார்க்க

ரத்த தானம்: தவ்ஹீத் ஜமா அத் அமைப்புக்கு பாராட்டு

கடந்த ஆண்டு 14 ரத்ததான முகாம்கள் நடத்தி சேவை புரிந்ததற்காக காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நினைவு அரசு புற்றுநோய் மருத்துவமனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு புதன்கிழமை பாராட்டுச்சான்றிதழ் வழங்கியது. கா... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்ட வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப்பணிகளை கண்காணிப்பு அலுவலா் கா.சுந்தசாமி ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரியாா் நகரில் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படுத்தப்... மேலும் பார்க்க

வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணி: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வருவாய்த் துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால... மேலும் பார்க்க