செய்திகள் :

பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் பேசியது என்ன? டிரம்ப் பேட்டி

post image

பாகிஸ்தான் ராணுவ தளபதி உடனான சந்திப்பின்போது பேசியது என்ன என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் 5 நாள்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். முதல் நாளான இன்று அதிபர் டிரம்ப் உடன் வெள்ளை மாளிகையில் மதிய உணவு அருந்தினார்.

வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையின் கேபினட் அறையில் இன்று (ஜூன் 18) பிற்பகல் 1 மணியளவில் (இந்திய நேரம்) அசீம் முனீருக்கு அதிபர் டிரம்ப் விருந்து உபசரித்தார்.

இந்த சந்திப்பிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை தான் நிறுத்தியதாகக் குறிப்பிட்டார்.

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் போரை நிறுத்த எந்தவித மத்தியஸ்தமும் நடைபெறவில்லை என்றும், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலேயே போர் நிறுத்தம் செய்யப்பட்டது; இதில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என அதிபர் டிரம்ப் உடனான தொலைபேசி உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று கூறினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி உடனான சந்திப்புக்குப் பிறகு, அதிபர் டிரம்ப் மீண்டும் போர் நிறுத்தத்துக்கு தான் காரணம் என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது, ''இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தினேன். பாகிஸ்தான் எனக்குப் பிடிக்கும். மோடி மிகச்சிறந்த நபர் என நினைக்கிறேன். அவருடன் நேற்று இரவு நான் பேசினேன். பிரதமர் மோடியுடன் நாங்கள் வணிக ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம். இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தலையிட்டு நிறுத்தினேன். பாகிஸ்தானில் போரை நிறுத்துவதற்கு அசீம் முனீர் முக்கிய காரணம். இதேபோன்று இந்தியா தரப்பில் போரை நிறுத்த மோடி முக்கியமானவர். இரண்டுமே அணு ஆயுத நாடுகள். அவர்கள் போரை நிறுத்த வேண்டும். இரு முக்கிய அணு ஆயுத நாடுகளுக்கு இடையே நான் போரை நிறுத்தியுள்ளேன்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பி-2 பாம்பர்ஸ் விமானங்கள் புறப்பட்டன? ஈரானின் நிலவறைகளை அழிக்கத் திட்டமா?

பாகிஸ்தான்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! தடம் புரண்ட பெட்டிகள்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து அதன் பாதையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 6 பெட்டிகள் தடம் புரண்டன. பெஷாவரிலிருந்து பலுசிஸ்தானின் குவேட்டா நோக்கி ஜாஃபர் எக்ஸ... மேலும் பார்க்க

ஈரான் ஒருபோதும் சரணடையாது: டிரம்ப்புக்கு கேமேனி பதில்

இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஈரான் ஒருபோதும் சரணடையாது என அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்கா தலை... மேலும் பார்க்க

பி-2 பாம்பர்ஸ் விமானங்கள் புறப்பட்டன? ஈரானின் நிலவறைகளை அழிக்கத் திட்டமா?

அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான பி -2 பாம்பர்ஸ் விமானங்கள் ஈரானின் அணுசக்தி உற்பத்தி நிலவறைகளை அழிக்கப் புறப்பட்டிருக்கலாம்.ஏனெனில், இந்தியப் பெருங்கடலில் உள்ள டீகோ கார்சியா என்ற தீவில் நிறுத்திவை... மேலும் பார்க்க

2024-ல் டிரம்பை ஆதரித்த வாக்காளர்களில் 64% பேர் போருக்கு எதிராக உள்ளனர்!

இஸ்ரேல் - ஈரான் போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டில் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் 64 சதவீதம் பேர் போருக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் ... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு! மக்கள் வெளியேற்றம்.. விமானங்கள் ரத்து!

இந்தோனேசியா நாட்டிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்து அப்பகுதி முழுவதும் சாம்பல் படலம் மற்றும் புகைப் பரவியதால், அங்குள்ள ஏராளமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தோனே... மேலும் பார்க்க

கமேனி ஒருவேளை கொல்லப்பட்டால்... ஈரானின் புதிய தலைவர் பதவி யாருக்கு?

ஈரான் மதகுரு அயத்துல்லா அலி கமேனி ஒருவேளை கொல்லப்பட்டால் ஈரானின் புதிய தலைவராக யார் தேர்தெடுக்கப்படுவார்கள் என கருத்துகள் எழுந்திருக்கின்றன.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெ... மேலும் பார்க்க