‘மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவா் ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும்’
பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் பேசியது என்ன? டிரம்ப் பேட்டி
பாகிஸ்தான் ராணுவ தளபதி உடனான சந்திப்பின்போது பேசியது என்ன என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் 5 நாள்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். முதல் நாளான இன்று அதிபர் டிரம்ப் உடன் வெள்ளை மாளிகையில் மதிய உணவு அருந்தினார்.
வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையின் கேபினட் அறையில் இன்று (ஜூன் 18) பிற்பகல் 1 மணியளவில் (இந்திய நேரம்) அசீம் முனீருக்கு அதிபர் டிரம்ப் விருந்து உபசரித்தார்.
இந்த சந்திப்பிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை தான் நிறுத்தியதாகக் குறிப்பிட்டார்.
ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் போரை நிறுத்த எந்தவித மத்தியஸ்தமும் நடைபெறவில்லை என்றும், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலேயே போர் நிறுத்தம் செய்யப்பட்டது; இதில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என அதிபர் டிரம்ப் உடனான தொலைபேசி உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று கூறினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி உடனான சந்திப்புக்குப் பிறகு, அதிபர் டிரம்ப் மீண்டும் போர் நிறுத்தத்துக்கு தான் காரணம் என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, ''இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தினேன். பாகிஸ்தான் எனக்குப் பிடிக்கும். மோடி மிகச்சிறந்த நபர் என நினைக்கிறேன். அவருடன் நேற்று இரவு நான் பேசினேன். பிரதமர் மோடியுடன் நாங்கள் வணிக ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம். இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தலையிட்டு நிறுத்தினேன். பாகிஸ்தானில் போரை நிறுத்துவதற்கு அசீம் முனீர் முக்கிய காரணம். இதேபோன்று இந்தியா தரப்பில் போரை நிறுத்த மோடி முக்கியமானவர். இரண்டுமே அணு ஆயுத நாடுகள். அவர்கள் போரை நிறுத்த வேண்டும். இரு முக்கிய அணு ஆயுத நாடுகளுக்கு இடையே நான் போரை நிறுத்தியுள்ளேன்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பி-2 பாம்பர்ஸ் விமானங்கள் புறப்பட்டன? ஈரானின் நிலவறைகளை அழிக்கத் திட்டமா?