செய்திகள் :

3 நாள்களில் 3வது சம்பவம்,, ஒடிசாவில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

post image

ஒடிசாவில் மேலும் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் மயூர்கஞ்ச் மாவட்டத்தில் பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த மூன்று நாள்களில் மாநிலத்தில் நிகழ்ந்த மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

மயூர்கஞ்ச் மாவட்டத்தில் 31 வயது பெண் ஒருவரை, அவரது குடும்பத்திற்கு நெருங்கிய நான்கு பேரும் வலுக்கட்டாயமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இல்லாத சமயத்தில் இந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி நால்வரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாகவும் நால்வரும் மிரட்டியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் நால்வரும் தலைமறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை இரவு நடந்த இந்த சம்பவம், மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை கோபால்பூர் கடற்கரையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் நான்கு சிறார்கள் உள்பட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

செவ்வாய்க்கிழமை கியோஞ்சர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா? தமிழகத்திலும் கரை ஒதுங்கிய துடுப்பு மீன்கள்!

கரை ஒதுங்கும் அரிய வகை துடுப்பு மீன்கள், இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஜப்பான் நாட்டு நம்பிக்கையின்படி, மிகவும் அரிதான துடுப்பு மீன்கள், காடற்கரையோரம் தென்படுவதே இயற்கைப் பே... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் மீண்டும் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்! அமைச்சர் வெளிநடப்பு!

கேரள ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயன்படுத்தப்படும் பாரதமாதாவின் படம் வைக்கப்பட்டதால், அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி வெளிநடப்பு செய்துள்ளார். கேரள ஆளுநர் மாள... மேலும் பார்க்க

12 மணி நேரம் வேலை! கர்நாடக அரசின் முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

கர்நாடகத்தில் ஐடி உள்பட சில துறைகளில் வேலை நேரத்தை 10 முதல் 12 மணி நேரமாக அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின்படி அதிகபட்ச வேலை நேரம் 9 மணி... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: நடுவிரலில் மை வைத்து அவமதித்தாக பாஜக வேட்பாளர் குற்றச்சாட்டு!

மேற்கு வங்க இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவர் தனது தனது நடுவிரலில் தேர்தல் அதிகாரிகள் வேண்டுமென்றே மை வைத்து அவமானப்படுத்திவிட்டதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.மேற்கு வங்கம், கேரளம்... மேலும் பார்க்க

உலக தரவரிசை பட்டியலில்.. 54 இந்தியக் கல்வி நிறுவனங்கள்: மோடி பெருமிதம்!

க்யூஎஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இந்தியக் கல்வித் துறைக்குச் சிறந்த செய்தியைக் கொண்டு வந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகின் சிறந்த பல்கலைகளின் தரவரிசைப் பட்டியலை ஆண்... மேலும் பார்க்க

மோசமான வானிலையில் சிக்கிய ஹெலிகாப்டர்! கல்லூரியில் அவசர தரையிறக்கம்!

கேரளத்தில் மோசமான வானிலையில் சிக்கிய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர், அங்குள்ள கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான செடாக் ஹெலிகாப்டர் இன்று (ஜூன் 19) ... மேலும் பார்க்க