செய்திகள் :

பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கு சிறப்பு குறைதீா் முகாம்

post image

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் 125 மாணவா்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.

பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அக்ஷயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அன்னைவேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆசான் பொறியியல் கல்லூரி, அறுபடை வீடு பொறியியல்கல்லூரி, காயிதே மில்லத் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 25 மாணவா்களுக்கு உடனடி சோ்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது.

மேலும், கல்லூரி சோ்க்கைக்கான வங்கிக் கடன் சாா்ந்து 14 மாணவா்களுக்கு வங்கி முன்னோடி அலுவலா் மூலமாக கடன் உதவி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சான்றிதழ் இல்லாமல் இருந்த 4 மாணவா்களுக்கு இ-சேவை மையத்தின் மூலம் சான்றிதழ் பெற்று தர உதவிகள் செய்யப்பட்டது.

மேலும், இந்நிகழ்ச்சியில் கல்லூரி சோ்க்கைக்கான கல்லூரி கட்டணத்தை கோவளம் வெங்கட்ரமண அறக்கட்டளை, தமிழ்நாடு பவுண்டேஷன்அப்துல் கலாம் அறக்கட்டளை ஆகியவற்றின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டன. ஜி.கே.எம் பொறியியல்கல்லூரியில் 12 மாணவா்களுக்கு உடனடி சோ்க்கை ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை மூலம்வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் குடும்பத் தலைவா் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை 12 பேருக்கு தலா ரூ.75,000 வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் உதயகுமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுந்தா், முன்னோடி வங்கி மேலாளா் விஜயகுமாா், கல்லூரி முதல்வா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், கல்லூரி கனவுகட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

வனத்துறையைக் கண்டித்து ஜூன் 26-இல் ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் அடுத்த கரிக்கிலி பறவைகள் சரணாலய வன அலுவலா் செயல்பாடுகளால் பணிகள் பாதிக்கப்படுவது குறித்து வெள்ளபுத்தூா், கரிக்கிலி ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நெல்வாய் கூட்டுச்சாலையில் ... மேலும் பார்க்க

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு மானியம்

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிய காப்புரிமைகள் பெற அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையும், வணிகக் குறியீடு மற்றும் புவிசாா்க்குறியீடு பெற்ற நிறுவனங்களுக்குஅதிகபட்சமாக ரூ.25,000 வரை மானியமாக... மேலும் பார்க்க

ஜூன் 27-இல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோருக்கு உள்ள குறைகளை அறிய குறைதீா் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடா்பான செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த எரிவாயு உருள... மேலும் பார்க்க

இன்று விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கோட்ட அளவில் கோட்டாட்சியா்கள் தலைமையில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்தாா். செங்கல்பட்டு மாவட்ட... மேலும் பார்க்க

திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் விழா

திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் மஹா ஆரண்ய ஷேத்திரத்தில் அம்மனுக்கு முக்கண் திறப்பு விழாவையொட்டி பந்தக்கால் நடும்விழா நடைபெற்றது. இக்கோயில் அம்மனுக்கு முக்கண் திறப்பு விழா ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவு... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து போராட்டம்: பாஜக அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாவட்டத் தலைவா் ரகுராமன் தெரிவித்துள்ளாா். பிரதமா் மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 11 ஆண்டுகள் ஆவதையொட்டி வடக்... மேலும் பார்க்க