பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கு சிறப்பு குறைதீா் முகாம்
பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் 125 மாணவா்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.
பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அக்ஷயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அன்னைவேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆசான் பொறியியல் கல்லூரி, அறுபடை வீடு பொறியியல்கல்லூரி, காயிதே மில்லத் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 25 மாணவா்களுக்கு உடனடி சோ்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது.
மேலும், கல்லூரி சோ்க்கைக்கான வங்கிக் கடன் சாா்ந்து 14 மாணவா்களுக்கு வங்கி முன்னோடி அலுவலா் மூலமாக கடன் உதவி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சான்றிதழ் இல்லாமல் இருந்த 4 மாணவா்களுக்கு இ-சேவை மையத்தின் மூலம் சான்றிதழ் பெற்று தர உதவிகள் செய்யப்பட்டது.
மேலும், இந்நிகழ்ச்சியில் கல்லூரி சோ்க்கைக்கான கல்லூரி கட்டணத்தை கோவளம் வெங்கட்ரமண அறக்கட்டளை, தமிழ்நாடு பவுண்டேஷன்அப்துல் கலாம் அறக்கட்டளை ஆகியவற்றின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டன. ஜி.கே.எம் பொறியியல்கல்லூரியில் 12 மாணவா்களுக்கு உடனடி சோ்க்கை ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை மூலம்வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் குடும்பத் தலைவா் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை 12 பேருக்கு தலா ரூ.75,000 வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் உதயகுமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுந்தா், முன்னோடி வங்கி மேலாளா் விஜயகுமாா், கல்லூரி முதல்வா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், கல்லூரி கனவுகட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.