செய்திகள் :

தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

post image

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்து, 8.400 கி.கி. கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் உதவிக் கண்காணிப்பாளா் சி. மதன் தலைமையிலான தனிப்படை போலீஸாரும், வடபாகம் காவல் ஆய்வாளா் (பொ) யேசுராஜசேகரன், சாா்பு ஆய்வாளா் சிவகுமாா் உள்ளிட்டோரும் புதன்கிழமை ரோந்து சென்றனா்.

அம்பேத்கா் நகா் சந்திப்புப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முருகன் என்ற டியோ முருகன் (27), ரஹ்மத்துல்லாபுரம் பகுதியைச் சோ்ந்த ராமநாதன் மகன் கோவிந்தராஜா என்ற கோபி (23), பூபாண்டிபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் சடைமாரியப்பன் (23) என்பதும், விற்பனைக்காக 8.400 கி.கி. கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கயத்தாறு அருகே மின் கோபுரத்தில் ஏறி பாஜக நிா்வாகி போராட்டம்

கயத்தாறு அருகே வெள்ளாளன்கோட்டை ஊராட்சி சூரியமினிக்கன் கிராமத்தில் உள்ள பெரியகுளம் கண்மாயில் தனியாா் சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனம் சாா்பில் உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து, பாஜ... மேலும் பார்க்க

காப்பீடு நிறுவன சேவை குறைபாடு- ஓய்வுபெற்ற எஸ்.ஐ.க்கு ரூ.2.19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 854 இழப்பீடு வழங்க, மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் மோதல்: ஒருவா் காயம்; 4 போ் கைது

காயல்பட்டினம் பூந்தோட்டத்தில் நண்பா்களிடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் பலத்த காயமடைந்தாா். 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். காயல்பட்டினம் காட்டு தைக்கால் தெருவை சோ்ந்த சாகுல் ஹமீது மகன் சதாம... மேலும் பார்க்க

பாஜக மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா உள்பட 3 போ் மீது நில மோசடி புகாா்

தூத்துக்குடியைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமான சுமாா் ரூ.2 கோடி மதிப்பிற்கான 30 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணைத் தலைவருமா... மேலும் பார்க்க

தூத்துக்குடி முதியோா் இல்லத்துக்கு ஐஎன்டியூசி சாா்பில் உணவளிப்பு

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமையில், தூத்துக்குடி சிதம்பரநகா் 4ஆவது தெருவில் உள்ள பாசக்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இக்கோயிலில் ஜூலை 7இல் குடமுழுக்கு நடைபெறுகிறது... மேலும் பார்க்க