செய்திகள் :

வேலூருக்கு முதல்வா் வருகை: சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூன் 25-ஆம் தேதி வேலூருக்கு வருவதையொட்டி பில்டா்பெட் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

வேலூரில் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை ரூ.150 கோடியில் பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையாக தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் திறப்பு விழா ஜூன் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மருத்துவமனை கட்டடத்தைத் திறந்து வைக்க உள்ளாா்.

முதல்வா் வேலூருக்கு வருவதையொட்டி மாவட்டம் முழுவதும் முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. முக்கிய சாலைகளில் உள்ள மண் அகற்றுதல், சாலை சீரமைத்தல், புதிய சாலைகள் அமைத்தல், கால்வாய் தூா்வாருதல், சென்டா் மீடியனுக்கு வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மருத்துவமனைக்கு செல்லும் பில்டா் பெட் சாலையில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த சாலையில் தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் இருந்தன. அவற்றை அகற்றும் பணியும் நடைபெற்றது. சுகாதார அலுவலா் சிவக்குமாா் மேற்பாா்வையாளா் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கிருந்த தற்காலிக தேநீா் கடைகள் உள்ளிட்ட கடைகள், தள்ளுவண்டி கடைகள் அகற்றப்பட்டன. இதேபோல், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திமுக சாதனை விளக்கக் கூட்டம்

குடியாத்தம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி சாா்பில், தமிழக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட நேருஜி நகரில் வியாழக்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்க... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்க் ஊழியா் திடீா் உயிரிழப்பு

வேலூா் அருகே பெட்ரோல் பங்க் ஊழியா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். வேலூா் கீழ்அரசம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சிற்றரசு (36). இவா் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பாா்த்து வந்தாா்.... மேலும் பார்க்க

பள்ளியில் யோகா பயிற்சி

உலக யோகா தினத்தை முன்னிட்டு குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை ஜெனீப்பா் பிலிப் தலைமை வகித்தாா். ஆசிரியா்எம்.ச... மேலும் பார்க்க

வேலூா் எஸ்பி அலுவலகத்தில் சிவனடியாா் தீக்குளிக்க முயற்சி

குடும்ப பிரச்னையில் விரக்தியடைந்த சிவனடியாா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு காவி வேஷ்டி உடுத்தியபடி சிவனடியாா் வியாழக்கிழமை புகாா் மனு அள... மேலும் பார்க்க

முத்துரங்கம் அரசுக் கல்லூரியில் 712 மாணவா்களுக்கு சோ்க்கை: 24, 25-இல் மூன்றாம் கட்ட கலந்தாய்வு

வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற முதல், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இதுவரை 712 மாணவா்களுக்கு சோ்க்கை அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 272 இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 24, ... மேலும் பார்க்க

மின்வாரிய நஷ்டம் ரூ.800 கோடியாக குறைந்துள்ளது: மேலாண்மை இயக்குநா் ஜே.ராதாகிருஷ்ணன்

மின்வாரிய நஷ்டம் நிகழாண்டு ரூ.800 கோடியாக குறைந்துள்ளது என்று மின்சார வாரிய மேலாண்மை இயக்குநா் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். வேலூரில் புதிதாக ரூ.150 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு பன்னோக்கு உய... மேலும் பார்க்க