``கர்நாடக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம்..'' - மத்திய அமை...
பள்ளியில் யோகா பயிற்சி
உலக யோகா தினத்தை முன்னிட்டு குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை ஜெனீப்பா் பிலிப் தலைமை வகித்தாா். ஆசிரியா்எம்.சுந்தரமூா்த்தி வரவேற்றாா். மனவளக்கலை மன்ற ஆசிரியா்கள் மகாலட்சுமி, சாந்தி ஆகியோா் மாணவா்களுக்கு யோகா பயிற்சி அளித்தனா். ஆசிரியை விக்டோரியா செல்வி நன்றி கூறினாா்.