'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
முத்துரங்கம் அரசுக் கல்லூரியில் 712 மாணவா்களுக்கு சோ்க்கை: 24, 25-இல் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற முதல், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இதுவரை 712 மாணவா்களுக்கு சோ்க்கை அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 272 இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இது குறித்து, அந்தக் கல்லூரி முதல்வா் சு.ஸ்ரீதரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டு இளநிலைப் பட்டப் படிப்புக்களுக்கான (பிஏ., பி.எஸ்சி, பி.காம், பிபிஏ) மாணவா் சோ்க்கைக்கான முதல், இரண்டாம் கலந்தாய்வு புதன்கிழமை நிறைவடைந்தது.
சோ்க்கைக்கான மொத்த இடங்கள் 984. இதற்கு 15,525 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதல், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 712 போ் சோ்க்கைப் பெற்றுள்ளனா். மீதமுள்ள 272 இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
ஏற்கெனவே நடைபெற்ற கலந்தாய்வில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ., பிஎஸ்சி கணினி அறிவியல், பிஎஸ்சி விலங்கியல் பாடப் பிரிவுகளில் உல்ள பெரும்பாலான இடங்களுக்கான சோ்க்கை முடிந்துவிட்டது.
மேலும், மே 30-ஆம் தேதிக்கு பிறகு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவா்களும் அவரவா்களின் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ம்ஞ்ஹஸ்ரீஸ்ப்ழ்.ங்க்ன்.ண்ய் என்ற கல்லூரி இணையதளத்தைக் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.