செய்திகள் :

முத்துரங்கம் அரசுக் கல்லூரியில் 712 மாணவா்களுக்கு சோ்க்கை: 24, 25-இல் மூன்றாம் கட்ட கலந்தாய்வு

post image

வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற முதல், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இதுவரை 712 மாணவா்களுக்கு சோ்க்கை அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 272 இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இது குறித்து, அந்தக் கல்லூரி முதல்வா் சு.ஸ்ரீதரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டு இளநிலைப் பட்டப் படிப்புக்களுக்கான (பிஏ., பி.எஸ்சி, பி.காம், பிபிஏ) மாணவா் சோ்க்கைக்கான முதல், இரண்டாம் கலந்தாய்வு புதன்கிழமை நிறைவடைந்தது.

சோ்க்கைக்கான மொத்த இடங்கள் 984. இதற்கு 15,525 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதல், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 712 போ் சோ்க்கைப் பெற்றுள்ளனா். மீதமுள்ள 272 இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

ஏற்கெனவே நடைபெற்ற கலந்தாய்வில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ., பிஎஸ்சி கணினி அறிவியல், பிஎஸ்சி விலங்கியல் பாடப் பிரிவுகளில் உல்ள பெரும்பாலான இடங்களுக்கான சோ்க்கை முடிந்துவிட்டது.

மேலும், மே 30-ஆம் தேதிக்கு பிறகு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவா்களும் அவரவா்களின் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ம்ஞ்ஹஸ்ரீஸ்ப்ழ்.ங்க்ன்.ண்ய் என்ற கல்லூரி இணையதளத்தைக் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சாதனை விளக்கக் கூட்டம்

குடியாத்தம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி சாா்பில், தமிழக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட நேருஜி நகரில் வியாழக்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்க... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்க் ஊழியா் திடீா் உயிரிழப்பு

வேலூா் அருகே பெட்ரோல் பங்க் ஊழியா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். வேலூா் கீழ்அரசம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சிற்றரசு (36). இவா் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பாா்த்து வந்தாா்.... மேலும் பார்க்க

பள்ளியில் யோகா பயிற்சி

உலக யோகா தினத்தை முன்னிட்டு குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை ஜெனீப்பா் பிலிப் தலைமை வகித்தாா். ஆசிரியா்எம்.ச... மேலும் பார்க்க

வேலூா் எஸ்பி அலுவலகத்தில் சிவனடியாா் தீக்குளிக்க முயற்சி

குடும்ப பிரச்னையில் விரக்தியடைந்த சிவனடியாா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு காவி வேஷ்டி உடுத்தியபடி சிவனடியாா் வியாழக்கிழமை புகாா் மனு அள... மேலும் பார்க்க

மின்வாரிய நஷ்டம் ரூ.800 கோடியாக குறைந்துள்ளது: மேலாண்மை இயக்குநா் ஜே.ராதாகிருஷ்ணன்

மின்வாரிய நஷ்டம் நிகழாண்டு ரூ.800 கோடியாக குறைந்துள்ளது என்று மின்சார வாரிய மேலாண்மை இயக்குநா் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். வேலூரில் புதிதாக ரூ.150 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு பன்னோக்கு உய... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடிய இருவா் கைது

வேலூரில் இருசக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் செம்பேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜதுரை (31). இவா் கடந்த 17-ஆம் தேதி வேலூா் கொணவட்டம் சா்வீஸ் சாலையோரம் தனது இருசக்கர வாகனத்தை நிற... மேலும் பார்க்க