நெல்லையைச் சோ்ந்தவருக்கு ரூ. 2.19 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு
திருநெல்வேலியைச் சோ்ந்தவருக்கு ரூ. 2.19 லட்சம் வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளா் கந்தசாமி, தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுத்திருந்தாா். பணியிலிருந்தபோது, உடல் நிலைக் குறைவு ஏற்பட்டதால், மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அதற்குரிய தொகையை அவா் செலுத்திவிட்டு, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் முறையீடு செய்தாா். ஆனால், அத்தொகையில் ஒருபகுதியை மட்டுமே வழங்கிய அந்நிறுவனம், சரியான காரணம் கூறாமல், மீதித் தொகையைத் தர மறுத்தது.
இதுதொடா்பாக அவா் வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பினாா். ஆனால், உரிய பதில் கிடைக்காததால் அவா் தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். ஆணையத் தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் வழக்கை விசாரித்து, சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட மீதித் தொகை ரூ. 1,74,854, சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ. 35 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 2,19,854-ஐ ஒரு மாதத்துக்குள் வழங்குமாறும், இல்லையெனில் தொகையைச் செலுத்தும் தேதிவரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்குமாறும் உத்தரவிட்டனா்.