செய்திகள் :

ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு

post image

இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் விரைவில் வரும் என அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

இந்தியாவின் மொழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தில்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

"நான் சொல்வதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த நாட்டில் ஒரு சமூகம் ஆங்கிலம் பேசுவதற்கு வெட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் ஒரு சமூகம் விரைவில் உருவாகும். அவர்கள்தான் இந்த நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறார்கள்.

இந்திய நாட்டின் மொழிகள் நம்முடைய கலாசாரத்தின் ரத்தினங்கள். மொழிகள் இல்லாமல் நாம் உண்மையான இந்தியர்கள் அல்ல.

ஒரு அந்நிய நாட்டு மொழியில் நமது வரலாறு, கலாசாரம், மதத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. முழுமையற்ற அந்நிய நாட்டு மொழிகளால் ஒரு முழுமையான இந்தியாவை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

போர் எவ்வளவு கடினம் எனக்கு நன்றாகத் தெரியும். இந்திய சமூகம் இந்தப் போரில் நிச்சயம் வெற்றி பெறும் என எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நமது மொழிகளில் பெருமையுடன் நாம் இந்த நாட்டை வழிநடத்துவோம், சித்தாந்தப்படுத்துவோம், ஆராய்ச்சி செய்வோம், முடிவுகளை எடுப்போம், இந்த உலகை ஆள்வோம். இதுபற்றி யாரும் சந்தேகப்படத் தேவையில்லை.

2047ல் உலக வளர்ச்சியின் உச்சத்தில் இந்தியா இருப்பதற்கு நமது மொழிகள் பெரிதும் பங்களிக்கும்" என்று பேசியுள்ளார்.

இதையும் படிக்க | வெடித்துச் சிதறிய எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்!

இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா? தமிழகத்திலும் கரை ஒதுங்கிய துடுப்பு மீன்கள்!

கரை ஒதுங்கும் அரிய வகை துடுப்பு மீன்கள், இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஜப்பான் நாட்டு நம்பிக்கையின்படி, மிகவும் அரிதான துடுப்பு மீன்கள், காடற்கரையோரம் தென்படுவதே இயற்கைப் பே... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் மீண்டும் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்! அமைச்சர் வெளிநடப்பு!

கேரள ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயன்படுத்தப்படும் பாரதமாதாவின் படம் வைக்கப்பட்டதால், அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி வெளிநடப்பு செய்துள்ளார். கேரள ஆளுநர் மாள... மேலும் பார்க்க

12 மணி நேரம் வேலை! கர்நாடக அரசின் முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

கர்நாடகத்தில் ஐடி உள்பட சில துறைகளில் வேலை நேரத்தை 10 முதல் 12 மணி நேரமாக அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின்படி அதிகபட்ச வேலை நேரம் 9 மணி... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: நடுவிரலில் மை வைத்து அவமதித்தாக பாஜக வேட்பாளர் குற்றச்சாட்டு!

மேற்கு வங்க இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவர் தனது தனது நடுவிரலில் தேர்தல் அதிகாரிகள் வேண்டுமென்றே மை வைத்து அவமானப்படுத்திவிட்டதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.மேற்கு வங்கம், கேரளம்... மேலும் பார்க்க

உலக தரவரிசை பட்டியலில்.. 54 இந்தியக் கல்வி நிறுவனங்கள்: மோடி பெருமிதம்!

க்யூஎஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இந்தியக் கல்வித் துறைக்குச் சிறந்த செய்தியைக் கொண்டு வந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகின் சிறந்த பல்கலைகளின் தரவரிசைப் பட்டியலை ஆண்... மேலும் பார்க்க

மோசமான வானிலையில் சிக்கிய ஹெலிகாப்டர்! கல்லூரியில் அவசர தரையிறக்கம்!

கேரளத்தில் மோசமான வானிலையில் சிக்கிய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர், அங்குள்ள கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான செடாக் ஹெலிகாப்டர் இன்று (ஜூன் 19) ... மேலும் பார்க்க