செய்திகள் :

இன்னுமா? கேதார்நாத் மேகவெடிப்பு.. 12 ஆண்டுகளாக அடையாளம் காணப்படாமல் 700 உடல்கள்!

post image

டெஹ்ராடூன்: கேதார்நாத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு நேரிட்ட மேகவெடிப்பின்போது சுமார் 4 ஆயிரம் பேர் பலியான சம்பவத்தில் 700க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

12 ஆண்டுகள் கடந்துவிட்டன. உறவினர்களின் டிஎன்ஏக்கள் ஒத்துப்போகாமல், உடல்களை ஒப்படைக்கும் பணி நிறைவடையாமலேயே உள்ளது.

அரசு அளிக்கும் தரவுகளின்படி, 735 உடல்கள் கேதார்நாத் மேகவெடிப்பின்போது கண்டெடுக்கப்பட்டன. இறந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள் என்ற நிலையில் சுமார் 6 ஆயிரம் பேர் தங்களது உறவினர்களின் உடல்களைக் கண்டறிய டிஎன்ஏ மாதிரிகளை சோதனைக்குக் கொடுத்தனர். ஆனால், மிகவும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இன்றைய நாள் வரை, 33 டிஎன்ஏக்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனால், என்னவானது தெரியுமா? நூற்றுக்கணக்கான உடல்கள் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்படாமலேயே உள்ளது.

2013ஆம் ஆண்டு இதே ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்தியாவின் மிக மோசமான இயற்கைப் பேரழிவுச் சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு முந்தைய பேரழிவாக 2004 சுனாமி அமைந்துள்ளது.

கேதார்நாத்தில் இருந்த ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். இந்த எண்ணிக்கை 4 ஆயிரம் அல்ல... 6 ஆயிரம் என்கின்றன பல்வேறு தகவல்கள். லட்சக்கணக்கானோர் சிக்கியிருந்த நிலையில் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டனர்.

அந்த நேரத்தில் உடல்கள் மட்டுமல்ல, கைவிரல்கள், பற்கள் கூட கண்டெடுக்கப்பட்டு ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் இருந்த ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதனுடன் 735 உடல்களின் டிஎன்ஏக்களின் மாதிரிகளும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

கேதார்நாத்தில் இருந்த, தரிசனத்துக்குச் சென்றவர்கள் என பலரது உறவினர்களும், டிஎன்ஏ சோதனைக்கு மாதிரிகளை வழங்கியபோதும், அதில் வெறும் 33 உடல்கள் மட்டுமே டிஎன்ஏ மூலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் 702 உடல்கள் ஒப்படைக்கப்படாமல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி! ஒருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள... மேலும் பார்க்க

ஒடிசாவில் தொடரும் காலரா! பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

ஒடிசாவில் காலரா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 2 மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் திறப்பை ஒத்திவைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோடைக்கால விடுமுறைகள் ம... மேலும் பார்க்க

ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

கடந்தாண்டில் லண்டனுக்கு இயக்கப்பட்ட போயிங் விமானத்தில் கோளாறு இருந்ததைச் சுட்டிக் காட்டிய, 2 விமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்த... மேலும் பார்க்க

கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.குஜராத் மாநிலத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த ஜூன்- 16, 17 மற்றும் 18... மேலும் பார்க்க

பிரதமர் வருகையால் ஒடிஷா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி வருகையால், புவனேஸ்வர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பாஜக தலைமையில் 3-ஆவது முறையாக ஆட்சி அமைக்கப்பட்டு, ஓராண்டு முடிவடைந்த நிலையில், அதன் கொண்டாட்ட நிகழ்... மேலும் பார்க்க

ஒடிசாவில் அதிகரித்துவரும் வன்கொடுமைகள்: 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்!

ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. இதுதொடர்பாக அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளி... மேலும் பார்க்க