செய்திகள் :

Euro Millions: இதுவரை யாரும் பெறாத லாட்டரி ஜாக்பாட்டை வென்ற நபர்; எத்தனை கோடிக்கு அதிபதி தெரியுமா?

post image

அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் 208 மில்லியன் பவுண்டுகள் (தோராயமாக ரூபாய் 2,120 கோடி) லாட்டரி டிக்கெட்டில் வென்றுள்ளார். இது ஐரோப்பாவில் இதுவரை வென்ற மிகப்பெரிய லாட்டரி பரிசாக கூறப்படுகிறது.

ஐரிஷ் என்ற நபர் தனது லாட்டரி டிக்கெட்டில் மிகப்பெரிய பரிசு தொகையை வென்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதிகபட்ச தொகையாக இந்த ஜாக்பாட்டை ஐரிஷ் வென்றுள்ளார்.

ஐரோப்பாவில் மிகப்பெரிய டிராவாக பார்க்கப்படும், "யூரோ மில்லியன்ஸ்" சூப்பர் டிரா சமீபத்தில் நடைபெற்றது. தற்போது யூரோ மில்லியன் லாட்டரி, மிகப்பெரிய பரிசுடன் காத்துக்கொண்டிருக்கிறது.

கால்பந்து வீரர் ஹாரி கேன் மற்றும் பாப் நட்சத்திரம் துவா லிபா

தி மிரரின் கூற்றுப்படி, ஜாக்பாட்டை வென்ற ஐரிஷின் சொத்து மதிப்பு, தற்போது 115 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்ட கால்பந்து வீரர் ஹாரி கேன் மற்றும் 110 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்ட பாப் நட்சத்திரம் துவா லிபா போன்ற பிரபலங்களை விட அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசிய லாட்டரி தலைமை நிர்வாகி சியான் மர்பி கூறுகையில் “மக்கள் தங்களது யூரோ மில்லியன் டிக்கெட்டுகளை கவனமாக சரி பார்க்க கேட்டுக்கொள்கிறேன்.

அப்படி தங்களது டிக்கெட்டுகளை சரிபார்த்து, அவர்கள் வெற்றியாளர்களாக இருந்தால் டிக்கெட்டின் பின்புறத்தில் கையொப்பமிட்டு அதை பாதுகாப்பாக வைத்து, தேசிய லாட்டரி தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

வெற்றி பெற்ற டிக்கெட்டின் இருப்பிடத்தை விரைவில் வெளியிடுவோம். மேலும் டிக்கெட் குறித்த விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும்" என்று கூறியிருக்கிறார்.

பிறந்து 10 நாளில் தனித்தனியாக தத்துக்கொடுக்கப்பட்ட இரட்டையர்கள்; 17 ஆண்டுகள் கழித்து இணைந்ததெப்படி?

பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் வெவ்வேறு குடும்பங்களுக்கு தத்துக்கொடுக்கப்பட்ட இரட்டையர்கள் தாங்கள் சகோதரிகள் என அறியாமலே நெருங்கிய நண்பர்கள் ஆன நெகிழ்ச்சி சம்பவம், சீனாவில் நிகழ்ந்துள்ளது.ஸாங் குவோஸின... மேலும் பார்க்க

"அதிர்ஷ்டவசமாக நான் ராஜா ரகுவன்சியாகவில்லை" - காதலனுடன் வாழ விரும்பிய மனைவி; வாழ்த்தி அனுப்பிய கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் படாவுன் என்ற இடத்தைச் சேர்ந்த சுனில் என்பவர் குஷ்பு என்ற பெண்ணைக் கடந்த மாதம் 17ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில நாட்கள் கணவன் வீட்டில் இருந்த குஷ்பு சம்பிராயப்பட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்; மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை சொல்வது என்ன?

மகாராஷ்டிரா நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மகாராஷ்டிராவில் பொருளாதார வளர்ச்சி நகரங்களை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது.கிராமங்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதுவும் பொதும... மேலும் பார்க்க

பெங்களூரு: ` கடை பெயர் பலகையில் கன்னடத்துக்கு முக்கியத்துவம் இல்லை'- வாக்குவாதம் செய்த முதியவர்

பெங்களூரில் உள்ள ஒரு கடையின் பெயர் பலகை அதிகமான கன்னட எழுத்தில் இல்லை என ஒரு முதியவர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் இருக்கும் கடைகளில் குறைந்தது 60... மேலும் பார்க்க

Sleeping Prince: 20 ஆண்டுக்கு பின் சவுதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' எழுந்துவிட்டாரா? Fact check!

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால், "தூங்கும் இளவரசர்" என்று பிரபலமாக அறியப்படுகிறார். அதற்கு காரணம் அவர் 20 ஆண்டுகளாக கோமாவில் உள்ளார்.2005 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தைத் த... மேலும் பார்க்க