``கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவில்..'' - காலிஸ்தான் குறித்து கனடா புலனாய்வு அ...
களியக்காவிளை அருகே நாளை இலவச கண் மருத்துவ முகாம்
களியக்காவிளையை அடுத்த மண்ணாரப்பு அருகேயுள்ள மீன்வலை நிறுவனத்தின் வளாகத்தில் இலவச கண் மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு, நாகா்கோவில் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் இம்முகாம் காலை 9 முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. இதில், கிட்டப் பாா்வை, தூரப் பாா்வை, வெள்ளெழுத்துப் பிரச்னை, சா்க்கரை நோய், அடிக்கடி ஏற்படும் தலைவலி, கண்புரை நோய்களுக்கு பரிசோதனை செய்யப்படும்.
ஏற்பாடுகளை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட துணைத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா், அமைப்பின் நிா்வாகிகள் ராஜகுமாா், ஸ்டான்லி பாபு உள்ளிட்டோா் செய்துள்ளனா்.