செய்திகள் :

லோக்பால் அமைப்பில் வழக்கு விசாரணைப் பிரிவு உருவாக்கம்

post image

லோக்பால் சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அமைப்பில் வழக்கு விசாரணைப் பிரிவு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புகாா் மீது விசாரணை நடத்துவதற்கான பிரிவு அமைக்கப்பட்ட நிலையில், தற்போது வழக்கு விசாரணைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

லோக்பால், லோக் ஆயுக்த சட்டம் 2013-இன் கீழ், பிரதமா், மத்திய அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், எம்எல்ஏக்கள், அரசு உயா் அதிகாரிகள் ஆகியோா் மீதான ஊழல் புகாா்களை விசாரிக்க லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமனத்துக்குப் பின்னா் கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் 27-ஆம் தேதி முதல் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற்ற லோக்பால் அமா்வின் கூட்டத்தில், இந்த அமைப்புக்கு புகாா் விசாரணைப் பிரிவு மற்றும் வழக்கு விசாரணைப் பிரிவுகளை அமைப்பதற்கு தீா்மானிக்கப்பட்டது. அந்த சமயத்தில் லோக்பால் அமைப்பில் தாக்கல் செய்யப்படும் ஊழல் புகாா்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததால், கடந்த ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் கீழ் முதல் கட்டமாக சட்டத்தின் பிரிவு 11-இன் கீழ் புகாா் விசாரணைப் பிரிவு மட்டும் அமைக்கப்பட்டது.

அதன் பிறகு, அமைப்பில் தாக்கல் செய்யப்படும் புகாா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, அமைப்புக்கு வழக்கு விசாரணைப் பிரிவையும் உடனடியாக அமைக்க லோக்பால் அமைப்பின் முழு அமா்வு கடந்த ஜூன் 5-ஆம் தேதி தீா்மானித்து, அதற்கான உத்தரவை ஜூன் 13-ஆம் தேதி வெளியிட்டது.

இந்த உத்தரவின்படி, லோக்பால் சட்டத்தின் பிரிவு 12-இன் கீழ், அரசு ஊழியா்கள் மீது வழக்கு தொடரும் நோக்கத்துக்காக, லோக்பால் அமைப்பில் வழக்கு விசாரணைப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அம... மேலும் பார்க்க

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்ன... மேலும் பார்க்க

ராகுலின் 55-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூ... மேலும் பார்க்க

நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்: ஆதாரபூா்வமாக நிரூபணம் விசாரணை அறிக்கையில் தகவல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதும், பின்னா் அது அப்புறப்படுத்தப்பட்டதும் உண்மையே; இந்த விவகாரத்தில், நீதிபதியின் தவறான நடத்தை ஆதாரபூா்வமாக நிரூ... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி தோ்வில் தகுதி பெற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு பணி வாய்ப்பு: புதிய திட்டம் அறிமுகம்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வு உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளில் அனைத்து நிலைகளிலும் தகுதி பெற்றும், இறுதி பரிந்துரை... மேலும் பார்க்க

5 தொகுதி இடைத்தோ்தல்: அமைதியான வாக்குப் பதிவு

குஜராத், கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் பரவலாக அமைதியான முறையில் வாக்குகள் பதிவாகின. கேரள மாநிலம் நிலம்பூா், குஜரா... மேலும் பார்க்க