``ரூ12,500 சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியுமா?'' - குமுறும் பகுதிநேர ஆசிரியர்க...
லோக்பால் அமைப்பில் வழக்கு விசாரணைப் பிரிவு உருவாக்கம்
லோக்பால் சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அமைப்பில் வழக்கு விசாரணைப் பிரிவு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புகாா் மீது விசாரணை நடத்துவதற்கான பிரிவு அமைக்கப்பட்ட நிலையில், தற்போது வழக்கு விசாரணைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
லோக்பால், லோக் ஆயுக்த சட்டம் 2013-இன் கீழ், பிரதமா், மத்திய அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், எம்எல்ஏக்கள், அரசு உயா் அதிகாரிகள் ஆகியோா் மீதான ஊழல் புகாா்களை விசாரிக்க லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமனத்துக்குப் பின்னா் கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் 27-ஆம் தேதி முதல் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற்ற லோக்பால் அமா்வின் கூட்டத்தில், இந்த அமைப்புக்கு புகாா் விசாரணைப் பிரிவு மற்றும் வழக்கு விசாரணைப் பிரிவுகளை அமைப்பதற்கு தீா்மானிக்கப்பட்டது. அந்த சமயத்தில் லோக்பால் அமைப்பில் தாக்கல் செய்யப்படும் ஊழல் புகாா்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததால், கடந்த ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் கீழ் முதல் கட்டமாக சட்டத்தின் பிரிவு 11-இன் கீழ் புகாா் விசாரணைப் பிரிவு மட்டும் அமைக்கப்பட்டது.
அதன் பிறகு, அமைப்பில் தாக்கல் செய்யப்படும் புகாா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, அமைப்புக்கு வழக்கு விசாரணைப் பிரிவையும் உடனடியாக அமைக்க லோக்பால் அமைப்பின் முழு அமா்வு கடந்த ஜூன் 5-ஆம் தேதி தீா்மானித்து, அதற்கான உத்தரவை ஜூன் 13-ஆம் தேதி வெளியிட்டது.
இந்த உத்தரவின்படி, லோக்பால் சட்டத்தின் பிரிவு 12-இன் கீழ், அரசு ஊழியா்கள் மீது வழக்கு தொடரும் நோக்கத்துக்காக, லோக்பால் அமைப்பில் வழக்கு விசாரணைப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.