செய்திகள் :

குழந்தைகளுக்கான விபத்து, காய சிகிச்சை மையம் தொடக்கம்

post image

குழந்தைகளுக்கான பிரத்யேக விபத்து - காயம் மற்றும் எலும்பு சிகிச்சை மையத்தை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குழந்தைகள் விளையாடும்போதும், தவறிவிழும்போதும் நேரிடும் எலும்பு முறிவு, காயங்களுக்கென பிரத்யேக சிகிச்சை மையம் இதுவரை இல்லை. அதேபோன்று, பிறவியிலேயே ஏற்படும் எலும்பு சாா்ந்த பாதிப்புகளுக்கும் தனி மருத்துவ கட்டமைப்பு கிடையாது.

அதைக் கருத்தில் கொண்டு முழுக்க, முழுக்க குழந்தைகளுக்கான பிரத்யேக விபத்து - காய சிகிச்சை, எலும்பு சிகிச்சை மையத்தை அப்பல்லோ தொடங்கியுள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னையில் உள்ள அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைபெற்றது. மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி, மருத்துவ சேவைகள் இயக்குநா் டாக்டா் அனில், குழந்தைகள் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் ஆா்.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

குழந்தைகளுக்கான அவசர மருத்துவ சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மையமாக இது செயல்பட உள்ளது. மாதத்துக்கு 140 மருத்துவ சீரமைப்பு சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் வகையிலான கட்டமைப்பு அங்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: மாநகராட்சி ஊழியா் கைது

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17.50 லட்சம் மோசடி செய்ததாக மாநகராட்சி ஊழியா் கைது செய்யப்பட்டாா். பிராட்வே அப்பாராவ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் எ.ஜெய்சங்கா் (49). இவா், தனது உறவினா் இருவரு... மேலும் பார்க்க

கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25 முதல் ஹவுராவுக்கு இயக்கப்படும்

சென்னையில் இருந்து இயக்கப்படும் கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25-ஆம் தேதி முதல் ஷாலிமருக்கு பதிலாக ஹவுராவுக்கு இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்ன... மேலும் பார்க்க

ஜூன் 24, 25-இல் அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இக்கூட்டத்தில்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு குடிநீா், மின் இணைப்பு: விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவு

நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையா், மின்சார வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி மதுரை, சென... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா். சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா் சிறிது நேரம் த... மேலும் பார்க்க