செய்திகள் :

IND vs ENG: "இந்த 3 விஷயங்களில் கவனமாக இருங்கள்" - சுப்மன் கில் அணிக்கு சச்சின் ஆலோசனை!

post image

Mஇங்கிலாந்தில் ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பைக்கான தொடரில் பங்கேற்கவிருக்கும் இளம் இந்திய அணிக்கு 3 அறிவுரைகளை வழங்கியுள்ளார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

இந்திய அணியின் பக்க பலமாக இருந்த விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகிய மூத்த வீரர்கள் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தனர்.

சுப்மன் கில் தலைமையில் ரிஷப் பண்ட் அவருக்கு துணையாக இருக்க, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலந்து அணிக்கு எதிராக களம் காண்கிறது இளம் படை.

Team India
Team India

இந்திய அணி 2007ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றிராத சூழலில், சச்சின் சுப்மன் கில் மற்றும் அவரது குழுவுக்கு தன் ஞானத்தைப் பகிர்ந்துகொண்டார்.

அந்த 3 விஷயங்கள்!

வானிலை (overhead conditions), காற்றின் தரம் மற்றும் ஆடுகளத்தின் தன்மை குறித்து வீரர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் சச்சின்.

"இங்கிலாந்தில் விளையாடும்போது நீங்கள் எப்போதும் இந்த 3 விஷயங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும். முதலாவது மேல்நிலை நிலமைகள் ((overhead conditions - வானிலை), இரண்டாவது காற்றின் தரம் மற்றும் மூன்றாவது ஆடுகளத்தின் (பிட்ச்) தன்மை.

Indian Players
Indian Players

இவை ஒவ்வொன்றும் நீங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதைத் பாதிக்கும் காரணிகள். ஆடுகளத்தில் ஒரு கட்டத்தில் உங்களுக்கு ஷாட்ஸ் ஆடுவதே கடினமானதாக இருக்கும். அப்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், அந்த கட்டத்தை அடையாளம் காண வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

"பந்துகளை விடுவது தற்காப்பு அல்ல"

மேலும் அவர் பந்துகளை அடிக்காமல் விடுவது தற்காப்பு நடவடிக்கை அல்ல என்றும் அது பேட்ஸ்மேனின் நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார். சூரியன் வெளியே வந்ததும் அதிக ரன்கள் அடிக்க முடியும் என பேட்ஸ்மேன்களுக்கு அறிவுரைக் கூறியுள்ளார்.

"பந்துகளை விடுவது தற்காப்பு நடவடிக்கை அல்ல. அது பந்துகளை சரியாக விடவும் தக்க நேரத்தில் அடிக்கவும் முடியும் என்ற நோக்கத்தைக் காட்டுகிறது. சூரியன் நன்றாக வெளியே வந்தது அது அடித்து விளையாட அழகான மைதானமாக மாறும். அப்போது பேட்ஸ்மேன்கள் நிறைய ரன்களை அடிக்க முடியும்." என ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாளை, ஜூன் 20ம் தேதி இந்தியா - இங்கிலந்து இடையே டெஸ்ட் போட்டிகள் தொடங்குகின்றன.

IPL 2025: 100 கோடி பார்வையாளர்கள், 84,000 கோடி நிமிடங்கள்... சாதனை படைத்த ஜியோ ஸ்டார்!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் கொண்டாட்டமாக ரசித்து மகிழ்வது, வருடாந்திர வழக்கமாகியிருக்கிறது. எல்லையில் பாகிஸ்தானுடன் மோதலையும் கடந்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிரு... மேலும் பார்க்க

"அந்த இரண்டு வீரர்கள் இல்லாதது நிம்மதியாக இருக்கிறது" - இங்கிலாந்து லெஜண்ட்ஸ் குறித்து பண்ட்

சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இங்கிலாந்து அணியை நாளை (ஜூன் 20) எதிர்கொள்ளவிருக்கிறது.ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் கோலி இல்லாததும், மூன்று போட்டியில் மட்டு... மேலும் பார்க்க

ENG vs IND: `கோலியுடன் விளையாடாதது வருத்தமே..' - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. விராட் கோலிமுதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன்20) ஹெட்டிங்ல... மேலும் பார்க்க

TNPL: பந்தை சேதப்படுத்தியதாக அஷ்வின் மீது அளிக்கப்பட்ட புகார் - வாபஸ் பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணி

டி.என்.பி.எல் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மீது கொடுத்தப்புகாரை மதுரை பாந்தர்ஸ் அணி திரும்ப பெற முடிவு செய்திருக்கிறது. டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் கடந்த 14-ந் தேதி... மேலும் பார்க்க

`கொச்சி அணிக்கு ரூ.538 கோடி வழங்க வேண்டும்!’ - உயர் நீதிமன்றம் உத்தரவு; என்ன செய்யப்போகிறது BCCI?

இந்தியாவில் 2008-ல் தொடங்கிய ஐ.பி.எல்லில் 2010 வரை மூன்று சீசன்களாக 8 அணிகள் பங்கேற்று விளையாடி வந்தன.பின்னர், 2011 சீசனில் இலங்கையின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே தலைமையில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா என்ற... மேலும் பார்க்க

"என்னை நானே தேர்வுசெய்ய மாட்டேன்; ஆனால் என் முயற்சி..." - கம்பேக் குறித்து உமேஷ் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலகட்டத்தில் குறிப்பாக, பும்ரா, ஷமி, சிராஜ் போன்றோருக்கு முன்பாக முன்னணி வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தவர் உமேஷ் யாதவ்.கடைசியாக 2023-ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்ப... மேலும் பார்க்க