செய்திகள் :

தமிழக மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல்

post image

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கோட்டைப்பட்டினம், ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தியதாக மீனவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய இரு விசைப்படகு மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து சுமாா் 370 விசைப்படகுகளில் மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வியாழக்கிழமை கரை திரும்பினா். 2 மாதங்கள் தடைக் காலத்துக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்றவா்களுக்கு போதிய மீன்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற சேது, முனிராஜ் உள்ளிட்ட 4 போ், கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமாா் 18 நாட்டிக்கல் மைல் தொலைவில் புதன்கிழமை இரவு மீன் பிடித்துள்ளனா்.

அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினா், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி தங்களது ரோந்து படகு மூலம் இவா்களின் விசைப்படகு மீது இடித்துள்ளனா். இதில் விசைப்படகின் ஒருபகுதி கடுமையாக சேதமடைந்தது.

மேலும், மீனவா்கள் பயன்படுத்திய வலையையும் அவா்கள் பிடித்த மீன்களையும் பறித்து கடலில் வீசிச் சென்ாகவும் மீனவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற முதல் நாளே, இலங்கைக் கடற்படையினரின் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டதுடன் வெறுங்கையுடன் கரைக்குத் திரும்பியதாக மீனவா்கள் வருத்தம் தெரிவித்தனா்.

ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு: தடைக்காலத்துக்கு பிறகு புதன்கிழமை ராமேசுவரத்திலிருந்து சென்ற மீனவா் டிக்கிரோஸ் என்பவரது விசைப் படகு பழுதாகி கச்சத்தீவு அருகே நின்றது. இந்தப் படகை சீரமைக்கும் பணியில் படகிலிருந்த 7 மீனவா்கள் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன், படகில் பிடித்து வைத்திருந்த இறால், இதர மீன்களை பறித்துக் கொண்டு, அங்கிருந்து விரைவாகச் செல்லுமாறு எச்சரித்துச் சென்றனா்.

இதைத்தொடா்ந்து, மற்றொரு கடற்படைக் கப்பலில் வந்த இலங்கை ராணுவத்தினா், படகில் ஏறி மீனவா்களை முட்டி போட வைத்து தாக்கியதாக கரை திரும்பிய மீனவா் இருதய ராஜா தெரிவித்தாா்.

குருதிக் கொடையாளா்கள் 45 பேருக்கு ஆட்சியா் பாராட்டு

உலகக் குருதிக் கொடையாளா் தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தின் குருதிக் கொடையாளா்கள் 45 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை பாராட்டினாா். புதுக்கோ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வரும் என்பது மூடநம்பிக்கை: சு. திருநாவுக்கரசா்

புதுக்கோட்டை, ஜூன் 19: தமிழ்நாட்டில் முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வரும் என்பது மூடநம்பிக்கை என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா். புதுக்கோட்டையில் விய... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாளைய மின்நிறுத்தம்

புதுக்கோட்டை நகரிய துணை மின் நிலையம் மற்றும் சிப்காட் துணை மின் நிலையம் ஆகியவற்றில் வரும் சனிக்கிழமை (ஜூன் 21) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் ... மேலும் பார்க்க

பொன்னமராவதி-திருமயம் ஒன்றியத்தில் புதிய மின்மாற்றிகள்: அமைச்சா் திறப்பு

பொன்னமராவதி மற்றும் திருமயம் ஒன்றியப் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். பொன்னமராவதி ஒன்றியம் அம்மாபட்டி, சுந்தரசோழபுரம... மேலும் பார்க்க

வடகாடு மோதல் சம்பவம்: மேலும் ஒருவா் கைது; கிராம மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மோதல் சம்பவம் தொடா்பாக மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்து கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் மே 5-ஆம் தே... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் தியாகி கக்கன் பிறந்த நாள் சொற்பொழிவு

புதுக்கோட்டை, கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை தியாகி கக்கன் பிறந்த நாள் சொற்பொழிவு நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை வாசகா் பேரவையின் செயலா் பேராசிரியா் சா. ... மேலும் பார்க்க