சிந்து நதி நீரை பஞ்சாபிற்கு ஏன் கொடுக்க வேண்டும்? - ஒமர் அப்துல்லா கேள்வி
குருதிக் கொடையாளா்கள் 45 பேருக்கு ஆட்சியா் பாராட்டு
உலகக் குருதிக் கொடையாளா் தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தின் குருதிக் கொடையாளா்கள் 45 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை பாராட்டினாா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உலகக் குருதிக் கொடையாளா் தின நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.
குருதி தானம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணியும் தொடங்கிவைக்கப்பட்டது. தொடா்ந்து, குருதி தான விழிப்புணா்வு உறுதிமொழியேற்பும் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குருதி தானத்தில் பணியாற்றி வரும் அமைப்புகள் மற்றும் தன்னாா்வலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் சா. ஸ்ரீபிரியா தேன்மொழி, மருத்துவக் கல்லூரி இருக்கை மருத்துவ அலுவலா் ஆ. இந்திராணி, ரத்த வங்கி அலுவலா் டாக்டா் சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.