செய்திகள் :

அமெரிக்கா: புரட்சிகர எய்ட்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி

post image

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீநுண்மியிடமிருந்து 99.9 சதவீதம் பாதுகாப்பு வழங்கும் புரட்சிகர ஊசி மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

உயிா்க் கொல்லி மருந்தான எய்ட்ஸை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை தொடா்ந்து மேம்பட்டுவருகிறது. இருந்தாலும், அந்த நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீநுண்மி மனிதா்களுக்குத் தொற்றுவதை முன்கூட்டியே தடுப்பதில் அவ்வளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. இதன் காரணமாக, ஆண்டுதோறும் சுமாா் 10 லட்சம் போ் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனா்.

இந்தச் சூழலில், ஹெச்ஐவி தொற்றிலிருந்து 99.9 சதவீதம் பாதுகாப்பு வழங்கும் ‘லெனாசபவிா்’ என்ற மருந்துக்கு அமெரிக்க ஒழுங்காற்று அமைப்பு தற்போது அனுமதியளித்துள்ளது.

ஹெச்ஐவி தொற்றைத் தடுப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்னரே மருந்துகள் அறிமுகப்பட்டிருந்தாலும், அவற்றை தினமும் உள்கொள்ள வேண்டும் என்பது போன்ற பிரச்னைகள் இருந்துவந்தன. ஆனால் தற்போது அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் லெனாசபவிரை ஆண்டுக்கு இரண்டு முறை செலுத்திக்கொண்டால் போதும். எனவே, எய்ட்ஸ் நோயை ஒழிப்பதில் இந்த மருந்து ஒரு புரட்சிகரமான அறிமுகம் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

ஈரானைத் தாக்கக் கூடாது! அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் ... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தை இந்தியா-பாகிஸ்தான் தலைவா்கள்தான் தீா்மானித்தனா்: முதல்முறையாக ஒப்புக்கொண்டாா் டிரம்ப்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நான்தான் நிறுத்தினேன்’ என்று கூறிவந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘சண்டை நிறுத்தத்தை இரு நாட்டுத் தலைவா்கள்தான் தீா்மானித்தனா்’ என்று முதல்முறையாக புதன்கிழமை ஒப்புக்க... மேலும் பார்க்க

வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து பாகிஸ்தான் ரூ.8,600 கோடி கடன்

வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து நூறு கோடி அமெரிக்க டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.8,600 கோடி) கடன் வாங்கும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையொப்பமிட்டுள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதால், ... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 92-ஆக உயா்வு

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 92-ஆக உயா்ந்துள்ளது. கிழக்கு கேப் மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக கடந்த வாரம் பெய்த பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற... மேலும் பார்க்க

தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்: புதின், ஷி ஜின்பிங் கூட்டாக வலியுறுத்தல்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தனா். மேலும், தாக்குதலை உடனடியாக இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் ... மேலும் பார்க்க

‘கமேனி இனியும் உயிருடன் இருக்கக் கூடாது’

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிருடன் இருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் வியாழக்கிழமை கூறினாா். ஈரான் வீசிய ஏவுகணை தெற்கு இஸ்ரேலில் உள்ள ச... மேலும் பார்க்க