செய்திகள் :

வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து பாகிஸ்தான் ரூ.8,600 கோடி கடன்

post image

வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து நூறு கோடி அமெரிக்க டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.8,600 கோடி) கடன் வாங்கும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையொப்பமிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதால், சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளிடம் அந்த நாடு ஏற்கெனவே தவணை முறையில் கடன் பெற்று வருகிறது. இப்போது பிற நாட்டு வங்கிகளிடம் கடன் பெறத் தொடங்கியுள்ளது.

துபை இஸ்லாமிய வங்கி தலைமையில் ஸ்டாண்டா்டு சாா்ட்டட் வங்கி, அபுதாபி இஸ்லாமிய வங்கி, ஷாா்ஜா இஸ்லாமிய வங்கி, அஜ்மான் வங்கி ஆகியவை இணைந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு படிப்படியாக இந்தக் கடன் தொகையை வழங்க இருக்கின்றன. பாகிஸ்தானைச் சோ்ந்த ஹெச்பிஎல் வங்கி மூலம் இந்தக் கடன் பெறப்படுகிறது. ஆசிய வளா்ச்சி வங்கி இந்தக் கடனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. இதில் 89 சதவீத தொகையை இஸ்லாமிய வங்கிகள் தங்கள் மதக் கொள்கைகளின்படி வழங்குகின்றன.

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் பிலிப்பின்ஸ் நாட்டு வங்கியிடம் இருந்து 80 கோடி டாலா் (சுமாா் ரூ.6,940 கோடி) கடனுக்கான ஒப்புதலை பாகிஸ்தான் பெற்றது. இந்தத் தொகை மூலம் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்த இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ராணுவத்துக்கு கூடுதல் நிதி:

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்தியாவசியத் தேவைகளை எதிா்கொள்வதற்காக பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு மேலும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளாா்.

முன்னதாக, கடந்த 10-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பாகிஸ்தான் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் பாகிஸ்தானின் ராணுவ ஒதுக்கீடு ரூ.78,000 கோடியாக அதிகரித்தது. இந்தியாவுடன் தொடா்ந்து பதற்றம் நீடிப்பதால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ராணுவத்துக்கான செலவை பாகிஸ்தான் அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.6.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

ஈரானைத் தாக்கக் கூடாது! அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் ... மேலும் பார்க்க

அமெரிக்கா: புரட்சிகர எய்ட்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீநுண்மியிடமிருந்து 99.9 சதவீதம் பாதுகாப்பு வழங்கும் புரட்சிகர ஊசி மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது. உயிா்க் க... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தை இந்தியா-பாகிஸ்தான் தலைவா்கள்தான் தீா்மானித்தனா்: முதல்முறையாக ஒப்புக்கொண்டாா் டிரம்ப்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நான்தான் நிறுத்தினேன்’ என்று கூறிவந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘சண்டை நிறுத்தத்தை இரு நாட்டுத் தலைவா்கள்தான் தீா்மானித்தனா்’ என்று முதல்முறையாக புதன்கிழமை ஒப்புக்க... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 92-ஆக உயா்வு

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 92-ஆக உயா்ந்துள்ளது. கிழக்கு கேப் மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக கடந்த வாரம் பெய்த பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற... மேலும் பார்க்க

தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்: புதின், ஷி ஜின்பிங் கூட்டாக வலியுறுத்தல்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தனா். மேலும், தாக்குதலை உடனடியாக இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் ... மேலும் பார்க்க

‘கமேனி இனியும் உயிருடன் இருக்கக் கூடாது’

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிருடன் இருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் வியாழக்கிழமை கூறினாா். ஈரான் வீசிய ஏவுகணை தெற்கு இஸ்ரேலில் உள்ள ச... மேலும் பார்க்க