செய்திகள் :

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு

post image

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகு பழுதாகி நின்ற நிலையில், இலங்கைக் கடற்படையினா் அந்தப் படகில் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறித்துச் சென்றதுடன், முட்டிபோட வைத்து தாக்கியதாக கரை திரும்பிய மீனவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து புதன்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படை கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அச்சம் காரணமாக குறைந்தளவில் இறால், நண்டு, கனவாய் மீன்களைப் பிடித்துக்கொண்டு கரை திரும்பினா்.

இந்த நிலையில், டிக்கிரோஸ் என்பவரது விசைப் படகு பழுதாகி கச்சத்தீவு அருகே நின்றது. இந்தப் படகை சீரமைக்கும் பணியில் படகிலிருந்த 7 மீனவா்கள் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன், படகில் பிடித்து வைத்திருந்த இறால், இதர மீன்களை பறித்துக் கொண்டு, அங்கிருந்து விரைவாகச் செல்லுமாறு எச்சரித்துச் சென்றனா்.

இதைத்தொடா்ந்து, மற்றொரு கடற்படைக் கப்பலில் வந்த இலங்கை ராணுவத்தினா், படகில் ஏறி மீனவா்களை முட்டி போட வைத்து தாக்கியதாக கரை திரும்பிய மீனவா் இருதய ராஜா தெரிவித்தாா்.

இதுகுறித்து மீனவா்கள் கூறியதாவது:

மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து அதிகளவில் இறால், நண்டு, கனவாய் மீன்களைப் பிடித்து வரலாம் என நினைத்து கடலுக்குள் சென்ற நிலையில், இலங்கைக் கடற்படையினா் அச்சுறுத்தல் காரணமாக குறைந்தவு மீன்களுடன் கரை திரும்பினோம்.

ராமேசுவரம் மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

பொதுமக்கள் தவறவிட்ட கைப்பேசிகள் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூா் காவல் நிலைய எல்லைப் பகுதியில் பொதுமக்கள் தவறவிட்டா 6 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. கைப்பேசிகளைத் தவறவிட்டது குறித்து அவற்றின... மேலும் பார்க்க

படகு உடைந்து மூழ்கியதில் மீனவா் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே நடுக்கடலில் உடைந்து மூழ்கிய படகிலிலுந்து 3 மீனவா்கள் நீந்தி கரை திரும்பிய நிலையில் ஒருவா் மாயமானா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு படகு இறங்கு தளத்திலிருந்து ... மேலும் பார்க்க

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் வழிபாட்டு உரிமை கோரி மனு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்களின் வழிபாட்டு உரிமையை வழங்கக் கோரி, தமிழா் தேசம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மு... மேலும் பார்க்க

ராமநாதபுரம் ஆயுதப் படை வளாகத்தில் ஜூலை 11-இல் வாகனங்கள் பொது ஏலம்

ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் ஜூலை 11-ஆம் தேதி பொது ஏலத்துக்கு விடப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரா... மேலும் பார்க்க

மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் பெறலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூா் ஒன்றியம், புளியங்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு கால்நடை மருத்துவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்... மேலும் பார்க்க