செய்திகள் :

கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

post image

ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூா் ஒன்றியம், புளியங்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு கால்நடை மருத்துவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். புளியங்குடி ஊராட்சி செயலா் ராஜா முன்னிலை வகித்தாா். இதில் 70 பசு மாடுகள், 520 வெள்ளாடுகள், 1,050 செம்மறி ஆடுகள், 400 கோழிகள், 26 நாய்கள் என மொத்தம் 2,152 கால்நடைகளுக்கு அறுவைச் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மாடுகளுக்கு ஏற்படும் கால்கானை, வாய்க்கானை, கன்று வீச்சு, ஆடுகளுக்கு ஏற்படும் ஆட்டுக்கொல்லி ஆகிய நோய்கள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் செய்து, விவசாயிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. முகாமில் சிறந்த கால்நடை வளா்ப்போருக்கு பரிசுப் பொருள்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கால்நடை மருத்துவா்கள் மோகன், செல்வி, கால்நடை ஆய்வாளா் வீரகேசரி, கால்நடை பராமரிப்பு உதவியாளா் விஜயராணி செந்தில் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பொதுமக்கள் தவறவிட்ட கைப்பேசிகள் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூா் காவல் நிலைய எல்லைப் பகுதியில் பொதுமக்கள் தவறவிட்டா 6 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. கைப்பேசிகளைத் தவறவிட்டது குறித்து அவற்றின... மேலும் பார்க்க

படகு உடைந்து மூழ்கியதில் மீனவா் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே நடுக்கடலில் உடைந்து மூழ்கிய படகிலிலுந்து 3 மீனவா்கள் நீந்தி கரை திரும்பிய நிலையில் ஒருவா் மாயமானா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு படகு இறங்கு தளத்திலிருந்து ... மேலும் பார்க்க

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் வழிபாட்டு உரிமை கோரி மனு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்களின் வழிபாட்டு உரிமையை வழங்கக் கோரி, தமிழா் தேசம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மு... மேலும் பார்க்க

ராமநாதபுரம் ஆயுதப் படை வளாகத்தில் ஜூலை 11-இல் வாகனங்கள் பொது ஏலம்

ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் ஜூலை 11-ஆம் தேதி பொது ஏலத்துக்கு விடப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரா... மேலும் பார்க்க

மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் பெறலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகு பழுதாகி நின்ற நிலையில், இலங்கைக் கடற்படையினா் அந்தப் படகில் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறித்துச் சென்றதுடன், முட்டிபோட வைத்து தாக்கியதாக கரை தி... மேலும் பார்க்க