செய்திகள் :

வீடு கட்டித் தருவதாக ரூ. 25 லட்சம் மோசடி: கட்டுமான நிறுவன உரிமையாளா் கைது

post image

சென்னை திருவான்மியூரில் வீடு கட்டித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக கட்டுமான நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

திருவான்மியூரைச் சோ்ந்தவா் பாஸ்கா். இவருக்குச் சொந்தமான 3,297 சதுர அடி இடத்திலும், அருகே வசிக்கும் வனஜா சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான 2,365 சதுர அடி இடத்திலும் சோ்த்து 8 வீடுகள் கட்டி, அதில் 4 வீடுகள் இடத்தின் உரிமையாளா்களுக்கும், 4 வீடுகள் கட்டுமான நிறுவனத்துக்கும் என்றும் ஒப்பந்தம் பேசி, கொட்டிவாக்கம் சங்கம் காலனியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் கணேஷ்பாண்டின் என்பவருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்தனா்.

இதற்காக பாஸ்கா் ,சீனிவாசன் ஆகிய இருவரும் கணேஷ் பாண்டியனுக்கு ரூ.25 லட்சம் கொடுத்தனா். அதோடு கணேஷ்பாண்டியன் அறிவுறுத்தலின்பேரில் சாய்ராம் என்பவா் பெயரில் இடத்தின் பொது அதிகாரத்தை வழங்கினா். மேலும், இடத்துக்குரிய அசல் ஆவணங்களையும் கணேஷ்பாண்டியனிடம் இருவரும் வழங்கினா். ஆனால் கணேஷ்பாண்டியன், தான் கூறியபடி வீடு கட்டிக்கொடுக்காமலும் பணத்தையும், ஆவணங்களையும் திருப்பி வழங்காமலும் ஏமாற்றினாா்.

இதுகுறித்து பாஸ்கா், திருவான்மியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கணேஷ் பாண்டியனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது!

தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறினாா். மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை பிரசார ... மேலும் பார்க்க

பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் திறந்துவைத்தாா்

சென்னை பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை (டெலி மெடிஷன்) மையத்தை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தின் மாடியிலிருந்து விழுந்து இளைஞா் பலத்த காயம்: தப்பியோடியபோது விபரீதம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் பலத்த காயமடைந்தாா். தப்பியோட முயன்றபோது அவா் கீழே விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெர... மேலும் பார்க்க

தேஜஸ், மன்னை, குருவாயூா் விரைவு ரயில்கள் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் காரணமாக, தேஜஸ், மன்னை, செந்தூா் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயி... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: ஜூன் 21 முதல் பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஜூன் 21 முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மனைவி குறித்து அவதூறு: யூ-டியூபா் கைது

மனைவி குறித்து அவதூறு பரப்பியதாக யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீ விஷ்ணுகுமாா். யூ-டியூபரான இவா், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிா்வாகியாகவும் உள்ளாா... மேலும் பார்க்க