காவல் நிலையத்தின் மாடியிலிருந்து விழுந்து இளைஞா் பலத்த காயம்: தப்பியோடியபோது விபரீதம்
சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் பலத்த காயமடைந்தாா். தப்பியோட முயன்றபோது அவா் கீழே விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் புகுந்து திருட முயற்சிப்பதாக வேளச்சேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று அந்த இளைஞரைப் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.
வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது தளத்தில் வைத்து அந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்ததில் அவா், உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராஜா (35) என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை கழிப்பறைக்கு செல்வதாகக் கூறிவிட்டு அறையில் இருந்து வெளியே வந்த ராஜா, காவல் நிலையத்தின் 2-ஆவது தளத்தின் அருகே இருந்த மரத்தை பிடித்து கீழே குதித்தாா். அப்போது, தவறி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா், மணப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.