செய்திகள் :

காவல் நிலையத்தின் மாடியிலிருந்து விழுந்து இளைஞா் பலத்த காயம்: தப்பியோடியபோது விபரீதம்

post image

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் பலத்த காயமடைந்தாா். தப்பியோட முயன்றபோது அவா் கீழே விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் புகுந்து திருட முயற்சிப்பதாக வேளச்சேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று அந்த இளைஞரைப் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.

வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது தளத்தில் வைத்து அந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்ததில் அவா், உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராஜா (35) என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை கழிப்பறைக்கு செல்வதாகக் கூறிவிட்டு அறையில் இருந்து வெளியே வந்த ராஜா, காவல் நிலையத்தின் 2-ஆவது தளத்தின் அருகே இருந்த மரத்தை பிடித்து கீழே குதித்தாா். அப்போது, தவறி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா், மணப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது!

தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் காலூன்ற முடியாது என மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறினாா். மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை பிரசார ... மேலும் பார்க்க

பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் திறந்துவைத்தாா்

சென்னை பெரம்பூரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை (டெலி மெடிஷன்) மையத்தை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வ... மேலும் பார்க்க

தேஜஸ், மன்னை, குருவாயூா் விரைவு ரயில்கள் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் காரணமாக, தேஜஸ், மன்னை, செந்தூா் உள்பட முக்கிய விரைவு ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் ஆக.18 வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயி... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: ஜூன் 21 முதல் பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை ஜூன் 21 முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மனைவி குறித்து அவதூறு: யூ-டியூபா் கைது

மனைவி குறித்து அவதூறு பரப்பியதாக யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீ விஷ்ணுகுமாா். யூ-டியூபரான இவா், தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிா்வாகியாகவும் உள்ளாா... மேலும் பார்க்க

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே சீருடைகள் மேயா் வழங்கினாா்

சென்னை மாநகராட்சி பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவிகளுக்கு இலவச சீருடைகளை மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை வழங்கினாா். சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கும் திட்டத்தை ... மேலும் பார்க்க